பின்லாந்தின் கல்விமுறை இலங்கைக்கு – ரணில்

211 0

தொழில்நுட்பத்துடன் இணைந்து அபிவிருத்தியடைந்து வரும் உலகுடன் கைகோர்த்து இலங்கையும் பயணிக்க வேண்டும் எனப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேவி பாலிக்கா வித்தியாலத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, 13 வருடகால பாடசாலை கல்வியை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்காக பின்லாந்தின் கல்வி முறையை ஆராய்ந்திருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

மேலும் இச்சவாலை வெற்றி கொள்வதற்கு நாட்டைப் பலப்படுத்தி அனைத்துத் துறைகளையும் நவீனமயப்படுத்தும் வேலை ஆரம்பமாகி உள்ளதாகவும் நவீன மயப்படுத்தலுடன் இணைந்து பயணிப்பதே காலத்தின் தேவை எனவும் அதிலிருந்து விலகிச் செல்ல முடியாதெனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment