தொண்டராசரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

247 0

நேர்முகத் தேர்வில் தோற்றி ஆசிரியர் நியமனத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 182 தொண்டராசிரியர்களும் இம்மாத இறுதிக்குள் நியமனம் வழங்க வடமாகாண சபை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகோள்விடுத்து தொண்டராசரியர்கள் வடமாகாண சபை முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தார்கள்.

வடமாகாண சபையின் 1058வது அமர்வு இன்று வியாழக்கிழமை (26.10) நடைபெற்றுக்கொண்டிருந்த போதுஇ நேர்முகத் தேர்வில் தோற்றி ஆசிரிய நியமனத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 182 தொண்டராசிரியர்கள் தமக்கான நியமனத்தினை வடமாகாண சபை உறுப்பினர்கள் தடுப்பதாக குற்றஞ்சாட்டி கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தார்கள்.

அந்த போராட்டத்தின் போதுஇ அவர்கள் தெரிவிக்கையில்இ வேலையற்ற அநாகைளாக இருக்கின்றோம். தொண்டராசியர்களுக்கான நேர்முகத் தேர்வில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட போதிலும் 182 பேரை மத்திய மாகாணம் அமைச்சு தெரிவு செய்திருந்தது.
மத்திய மாகாண அமைச்சினால் இடம்பெற்ற 182 தொண்டராசிரியர்களின் தெரிவிலும் குளறுபடிகள் இருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர்கள் கூறி அரசியல் காழ்ப்புணர்சிக்காகவும்இ உறுப்பினர்களுக்கிடையில் உள்ள விரோதம் காரணமாகவும் எமது நியமனத்தினை இடைநிறுத்தி வைத்துள்ளனர்.

வடமாகாண சபை உறுப்பினர்கள் தமது விரோதங்களை நிறுத்தி கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தொண்டராசியர்களாக கடமையாற்றிய எமக்கு உடனடியாக நியமனத்தினை தருமாறு வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
அத்துடன்இ நேர்முகத் தேர்வில் தோற்றி தெரிவு செய்யப்படாத ஆசிரியர்களுக்கும் நியமனம் வழங்குவதற்காக நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

எமது நியமனத்தினை இழுத்தடிப்பதன் மூலமாக எமது வாழ்க்கையை அளிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வடமாகாண சபைக்கு வாக்களித்து அனுப்பிய எம்மை எமது கத்தி எடுத்து எமது வயிற்றினையே குத்திக் கிழிக்கும் செயற்பாட்டினை முன்னெடு;த்து வருகின்றீர்கள்.

இம்மாத இறுதிக்குள் தொண்டராசிரியர்களின் நியமனங்களை உடனடியாக வழங்கி பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
தமக்கான நியமனம் கிடைக்காவிடின் தொடர்ந்தும் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தொண்டராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment