சிறைச்சாலைகளை மக்கள் நடமாட்டமற்ற பிரதேசங்களுக்கு மாற்றத் திட்டம்

593 0

welikada-495x279நகரங்களில் உள்ள சிறைச்சாலைகளை மக்கள் நடமாட்டமற்ற இடவசதி கூடிய பிரதேசங்களுக்கு மாற்றுவதற்கு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கமையவே அமைச்சரவையில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சிறைச்சாலைகளை சீர்த்திருத்த நிலையங்களாக மாற்றியமைக்கும் பொருட்டு சிறைச்சாலைகளில் துரித மறுசீரமைப்பை மேற்கொள்ளும் தேவை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சனநெரிசல் மிகுந்த பகுதிகளில் காணப்படும் சிறைச்சாலைகளான கொழும்பு, காலி, மாத்தறை, பதுளை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய சிறைச்சாலைகளை மக்கள் நடமாட்டம் அற்ற பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளை இடம்மாற்றுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடு க்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை தெரிவித்துள்ளது.

Leave a comment