சீனாவின் கடன் தாம­தத்தால் அதிவேக வீதி நிர்­மாண திட்­டத்­திற்கு முட்­டுக்­கட்டை

259 0

சீனாவின் எக்ஸிம் வங்கி 1.1 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான பணத்தை கட­னாக வழங்­கு­வதில் தொடர்ந்து தாம­தித்து வரு­வதன் கார­ண­மாக மத்­திய அதி­வேக வீதியின் முத­லா­வது கட்ட பணிகள் தடைப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

37.09 கிலோ­மீற்றர் தூரத்தை உள்­ள­டக்­கிய மேற்­படி திட்டம் மீரி­க­ம­வி­லி­ருந்து ஏனைய பகு­தி­களை இணைக்­கி­றது.

“எதிர்­வரும் ஆண்டு மார்ச் மாதத்­துக்குள் எம்மால் கடன் பெற முடி­யா­விட்டால் நாம் வேறு வழி­களைத் நாட­வேண்­டி­யி­ருக்கும்” என வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபையின் தலைவர் நிஹால் சூரி­யா­ராச்சி தெரி­வித்தார்.

இந்தத் திட்டம் தொடர்­பான கடன் பெறப்­ப­டு­மானால் நிர்­மாண பணியைத் துரி­தப்­ப­டுத்தும் முயற்­சியில் இந்தத் திட்­டத்தின் செல­வினம் அதி­க­ரிக்­கப்­ப­ட­மாட்­டாது என்ற உடன்­ப­டிக்­கையை அர­சாங்கம் எட்­டு­வது சாத்­தி­ய­மாகும் என அவர் மேலும் தெரி­வித்தார்.

இந்­நி­லையில் மேற்­படி கடன் நீண்ட கால­மாக தாம­த­மா­கி­யுள்­ள­தையும் அதனால் அந்தத் திட்­டத்தை முன்­னெ­டுப்­பது தாம­தத்தை எதிர்­கொண்­டுள்­ள­தையும் நெடுஞ்­சாலை அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யல்ல உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார்.

நாங்கள் இந்த விவ­கா­ரத்தை கொழும்­பி­லுள்ள சீனத் தூது­வ­ரிடம் கொண்டு சென்று இரா­ஜ­தந்­திர வழி­மு­றை­யூ­டாக கடன் வழங்­கலைத் துரி­தப்­ப­டுத்த நம்­பிக்கை கொண்­டுள்ளோம் என அவர் தெரி­வித்தார்.

அந்தத் திட்­டத்தின் ஆகக்­கூ­டிய பயன்­பாட்டை பெறு­வ­தற்கு அதன் முதற்­கட்ட பணி பூர்த்தி செய்­யப்­ப­டு­வது முக்­கி­ய­மா­ன­தா­க­வுள்­ள­தா­கவும் அந்த அதி­வேகப் பாதை மீரி­க­ம­விற்கும் குரு­நா­க­லுக்­கு­மி­டை­யி­லான அடுத்த கட்ட வீதி நிர்­மா­ணத்­துடன் தொடர்பைக் கொண்­டது எனவும் லக் ஷ்மன் கிரி­யல்ல கூறினார்.

அதே­ச­மயம் பிர­த­மரின் கண்­கா­ணிப்பின் கீழுள்ள வெளி­நாட்டு வளங்கள் திணைக்­க­ளத்தின் அதி­கா­ரி­யொ­ருவர் இது தொடர்பில் தெரி­விக்­கையில், பிர­த­மரின் சீனா­வுக்­கான விஜ­யத்தின் போது மேற்­படி கடன் தொடர்­பான பிரச்­சினை கவ­னத்­திற்கு முன்­வைக்­கப்­பட்­ட­தா­கவும் இந்­நி­லையில் இந்த விவ­கா­ரத்தை கொழும்­பி­லுள்ள சீனத் தூத­ர­கத்தின் முன் மீண்டும் கொண்டு செல்­வ­தற்கு அர­சாங்கம் நம்­பிக்கை கொண்­டுள்­ள­தா­கவும் கூறினார்.

நிலை­யான வட்டி வீதத்­துடன் 5 வருட கருணைக் காலத்தை உள்­ள­டக்கி 20 வருட காலத்தில் மீளச் செலுத்­தக்­கூ­டி­ய­தா­க­வுள்ள இந்தக் கடனைப் பெறுவதற்கு அரசாங்கம் ஆவலுடன் உள்ளதாக அவர் மேலும் தெரி வித்தார்.

அதேசமயம் பிறிதொரு கடனைப் பெறு வதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெ டுப்பது மேற்படி திட்டத்தையும் அது தொடர் பான முழு செயற்கிரமத்தையும் தாமதப்ப டுத்துவதாக அமையும் என அவர் கூறினார்.

Leave a comment