ஆப்கானிஸ்தானில் இரண்டு முஸ்லிம் பள்ளிவாசல்களில் இடம்பெற்ற இரு குண்டு வெடிப்புகளில் பலியானவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு காபூல் மற்றும் கோர் ஆகிய பகுதிகளிலேயே குறித்த குண்டு வெடிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
காபூல் நகரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 39 பேர் பலியானதுடன், கோர் பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 21 பேர் பலியாகினர்.
நேற்று இரவு இடம்பெற்ற இந்த குண்டு வெடிப்புக்களில் பலர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்றுள்ளது.