காணாமல் போன ஒருவரது சடலம் மீட்பு!

979 0

முல்லைத்தீவு கடலில் குளிக்கச்சென்ற இரு இளைஞர்களை காணவில்லை என  தேடுதல் நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஒருவரது உடலம் மீட்கப்பட்டது

முல்லைத்தீவு கடலில் இன்று பிற்பகல் 2 மணியளவில்  கடலில் குளிக்கச்சென்ற  7 பேரில் இருவர் திடீரென அலையில் இழுத்துச்செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதால் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை நடைபெற்று வந்தது

முதலில் கரைவலையை பயன்படுத்தி மீனவர்கள் தேடுதல் மேற்கொண்டனர் மீண்டும் திருக்கை வலையை பயன்படுத்தி தேடுதல் மேற்கொண்ட போது ஒருவரது உடலம் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதோடு மற்றயவரை தேடி மீண்டும் தேடுதல் நடைபெறுகிறது .

Leave a comment