மஹிந்தவை நாம் பாதுகாப்போம்- ரணில்

Posted by - December 9, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பாதுகாப்பது தங்களுக்கே அதிகம் லாபகரமானது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அவருக்கு எந்தவொரு ஆபத்தும் வருவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் எனவும் பிரதமர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு நாடு முழுவதும் செல்ல வேண்டியுள்ளதனால் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைக் கூறினார். முன்னாள் ஜனாதிபதிக்குள்ள

வன்னிவிளான்குளப் பகுதியில் வைத்து ஊடகவியலாளர் மீது தாக்குதல்

Posted by - December 9, 2017

மாங்குளம் – மல்லாவி வீதியூடாக சென்று கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

தமிழர் தரப்பு அரசியலின் பலவீனம்!

Posted by - December 9, 2017

தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து, உதயசூரியன் சின்னத்தைப் பொதுச்சின்னமாக ஏற்று புதிய அணியை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஈபிஆர்எல்எவ் கட்சி தமிழரசுக் கட்சிக்கு எதிராகவே இந்த அணி உருவாக்கப்படுகின்றது என அறிவித்துள்ளது.

சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் சார்பு சாசனம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் – மஹேஷினி கொலன்னே

Posted by - December 9, 2017

சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் சார்பு சாசனத்தை ஏற்றுக்கொள்வதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தமது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விவரங்களைத் திரட்டும் பணி

Posted by - December 9, 2017

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விவரங்களைத் திரட்டும் பணிகள் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஊடாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறன.

போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் பணியில் இருந்து விலகியவர்களாக கருதப்படுவர்!

Posted by - December 9, 2017

தொடரூந்து சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தால், போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் பணியில் இருந்து விலகியவர்களாக கருதப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் போலி நாணயத்தாள்களை அச்சிட்டவர் கைது

Posted by - December 9, 2017

திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கும்புருபிட்டி – 8ம் வட்டாரத்தில் போலி நாணயத் தாள் அச்சிடும் இடமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. 

பொலிஸாரின் இடமாற்றங்கள் அனைத்தும் தற்காலிகமாக இரத்து

Posted by - December 9, 2017

பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரதும் இடமாற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு, பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர உத்தரவிட்டுள்ளார். 

வீதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு : கொலையா ? விபத்தா?

Posted by - December 9, 2017

குருநாகல் – தம்புள்ளை வீதியில் தலகிரியாகம பகுதியில் பிரதான பாதைக்கு அருகில் கடும் காயங்களுடன் நபரொருவரின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.