யாசகத்தில் ஈடுபட தடை

Posted by - December 20, 2017

கொழும்பு நகரில் யாசகத்தில் ஈடுபடுவதற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து தடை செய்யப்படுவதாக பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், கொழும்பு நகரில் 600 யாசகர்கள் யாசகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யாசகத்தில் ஈடுபடுவோர்களின் வாழ்வாதாரம் கருதி, அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக அம்பலாந்தோட்டை – ரிதிகமயில் 80 மில்லியன் ரூபாய் செலவில் புனர்வாழ்வு நிலையமொன்று அமைக்கப்பட்டுள்ளது. யாசகத்தில் ஈடுபடுவதை நிறுத்துமாறு முதலில் அவர்களிடம் கருணை அடிப்படையில் கோருவதாகவும்,

அனைத்து சபைகளுக்குமான கட்டுப்பணத்தை செலுத்தியது ஸ்ரீ ல.சு.க

Posted by - December 20, 2017

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ் மாவட்ட ஒட்டுமொத்த சபைகளுக்குமான கட்டுப்பணத்தினை சிறிலங்கா சுதந்திரக் கட்சி இன்று (20) செலுத்தியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. இன்று (20) காலை 10 மணிக்கு யாழ் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் பணத்தைக் கட்டியுள்ளனர். இதேவேளை உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் நாள் நடத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

காடுகள் தீப்பற்றுவதை தடுக்க விஷேட வேலைத் திட்டங்கள்

Posted by - December 20, 2017

காடுகள் தீப்பற்றுவதை கட்டுப்படுத்துதல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையின் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. இதில், காடுகள் தீப்பற்றி எரிவதை கட்டுப்படுத்துதல் மற்றும் தடுக்கும் நோக்கில் காடுகளினுள் தீப் பரவுவதை தடுப்பதற்கு ஏதுவான முறையில் fire belts ஏற்படுத்துதல், தீப்பிடிக்கும் காடுகளுக்கு அருகில் தீயணைக்கும் விசேட பிரிவுகளை ஸ்தாபித்தல், பொது மக்களை அறிவுறுத்தல் போன்ற நிகழ்ச்சி தொடர் ஒன்றினை நாடளாவிய ரீதியில்

காட்டு யானைத் தடுப்பு வேலிகளுக்கு மின் வழங்கும் செயலூக்கி திருட்டு – கிராம மக்கள் அச்சத்தில்!

Posted by - December 20, 2017

மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் காட்டு யானைத் தடுப்பு வேலிகளுக்கு மின்சாரத்தை வழங்கும் செயலூக்கி  திருடப்பட்டுள்ளதாக ஆயித்தியமலைப் பொலிஸார் தெரிவித்தனர். உன்னிச்சை தொடக்கம் கற்பானை வரையான நீண்ட வனப் பிரதேசங்களில் இருந்து மக்கள் வாழும் விவசாய குடிநிலப் பகுதிகளுக்குள் காட்டு யானைகள் நுழைவதைத் தடுப்பதற்காக காட்டோரங்களில் அமைக்கப்பட்ட மின்சார அதிர்ச்சித் தடுப்பு வேலிகளுக்கு மின்சாரத்தை வழங்கும் செயலூக்கி  நெடியமடு பகுதியில் பொருத்தப்பட்டிருந்தது. பாதுகாப்பான சாவடி ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த இந்த செயலூக்கி கடந்த சில தினங்களுக்கு

இலவச பாடப்புத்தகங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை- ஐ.எம்.கே.பி.இலங்கசிங்க

Posted by - December 20, 2017

பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக பாடப்புத்தகங்கள் வழங்குவதை அரசாங்கம் இடைநிறுத்தியிருப்பதாக சிலர் மேற்கொண்டுவரும் பிரசாரத்தில் எந்த உண்மையுமில்லையென கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஐ.எம்.கே.பி.இலங்கசிங்க தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்காக 410 வகைகளில் 43 மில்லியன் புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. பாடப்புத்தகங்களை விநியோகிப்பதற்காக அரசாங்கம் ஆண்டு தோறும் சுமார் 4 பில்லியன் ரூபாவை செலவிடுகின்றது. எனவே பொய்ப் பிரசாரங்களுக்கு எவரும் ஏமாற வேண்டாமென்று கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சுற்றாடல் பேரவையின் நடவடிக்கைகளை பலப்படுத்துவது அவசியம்- மைத்திரிபால

Posted by - December 20, 2017

தேசத்தின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு சுற்றாடல் பாதுகாப்பிற்காக நாம் மேற்கொள்ளவேண்டிய கடமைகள் மற்றும் பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்திய ஜனாதிபதி, சுற்றாடல் பாதுகாப்பிற்காக தேசிய திட்டமொன்றின் அடிப்படையில் செயற்பட்டு அந்த இலக்குகளை அடைந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார். மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கேட்போர்கூடத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய சுற்றாடல் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு சுற்றாடல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வழிகாட்டல்களையும் அறிவுரைகளையும்

அஸ்பெஸ்டோஸ் கூரை தகடுக்கான தடை நீக்கம்

Posted by - December 20, 2017

அரச நிறுவனங்களில் ஜனவரி 1ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்த அஸ்பெஸ்டோஸ் கூரை தகடுகளுக்கான தடையை நீக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. குறித்த வகை கூரை தகடுகளின்பாதிப்பு குறைவாக இருப்பதாக சுகாதார பிரிவினரால் கண்டறியப்பட்டதை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் நீல நிற அஸ்பெஸ்டோஸ் கூரை தகடுகளுக்கான தடையை தொடர்ந்தும் அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அஸ்பெஸ்டோஸ் கூரை தகடுகளினால் புற்று நோய் உண்டாவதாக கூறி

இலங்கை தேயிலைக்கு ரஷ்யாவில் தடை – புடினுக்கு ஜனாதிபதி கடிதம்

Posted by - December 20, 2017

இலங்கை தேயிலையை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா விதித்துள்ள தடையை நீக்குமாறு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக வெளிநாட்டு இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை தேயிலை தொடர்பில் ரஷ்யா விடுத்துள்ள இடைக்கால தடை நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட இலங்கைத் தேயிலையில் வண்டுகள் இருப்பதாக தெரிவித்து, இலங்கையிலிருந்து தேயிலை உள்ளிட்ட விவசாய உற்பத்தி பொருட்களுக்கு ரஷ்யா இடைக்கால

விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட பெருந்தொகை சீ.டிக்கள் மீட்பு

Posted by - December 20, 2017

கிளிநொச்சி – இராமநாதபுரம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் கொள்கலன் ஒன்றில் இட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் 91 இறுவெட்டுக்கள் மற்றும் பல பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.