தமிழீழ பிரகடனம் செய்த வட்டுக்கோட்டை மண்ணில் இருந்து மாற்றம் ஆரம்பமாக வேண்டும் – சட்டத்தரணி சுகாஸ்

Posted by - December 20, 2017

தமிழீழ பிரகடனத்தை செய்த வட்டுக்கோட்டை மண்ணில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்த முயல்கிறோம் அதற்கான ஆணையினை தமிழ் மக்கள் வழங்க வேண்டும் என சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார். வலிகாமம் மேற்கு பிரதேச சபை தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்காக  சட்டத்தரணி க.சுகாஸ் வேட்புமனுவினை யாழ்.உதவி தேர்தல் ஆணையாளரிடம் இன்று (20.12.2017) கையளித்தார்.

முல்லைத்தீவில் பரவும் மர்மக் காய்ச்சல்!

Posted by - December 20, 2017

முல்லைத்தீவு மாவட்டத்தில் பரவி வரும் ஒரு வகை மர்மக் காய்ச்சல் தொடர்பில் ஆராய விஷேட வைத்தியக் குழு ஆய்வுகளை நடாத்தியுள்ள போதும் ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்படவில்லை. இந்த விஷேட வைத்திய குழு கடந்த 16 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டது. வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் வேண்டுகோளுக்கு அமையவே இந்த குழுவினர் அங்கு முல்லைத்தீவிற்கு விஜயம் செய்திருந்தனர் மாதத்தின் இதுவரையான காலப் பகுதியில் முல்லைத்தீவில் மர்ம காய்ச்சல் காரணமாக சுமார் ஒன்பது பேர்

மீட்கப்பட்ட ஆயுதங்களுக்கும் எனக்கும் தொடர்பில்லை- சித்தார்தன்

Posted by - December 20, 2017

எமது அமைப்பின் அனைத்து ஆயுதங்களும் ஒப்படைக்கப்பட்டுவிட்டன, மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது என புளோட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியிலுள்ள வீடொன்றில் ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் புளொட் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் நேற்று (செவ்வாக்கிழமை) கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த பகுதிக்கு சென்ற தர்மலிங்கம் சித்தார்தன் நிலைமைகளை ஆராய்ந்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”2009 ஆம்

வித்தியா கொலை வழக்கில் நிரபராதிக்கு விளக்க மறியல் நீடிப்பு!!

Posted by - December 20, 2017

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் நிரபராதியின் விளக்கமறியல் நீடிக்கபட்டுள்ளது.மாணவி வித்தியா கொலை வழக்கில் முதலாவது சந்தேக நபராக கைது செய்யப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமார் ஊர்காவற்துறை நீதிமன்ற வாளகத்தினுள் வைத்து ஊர்காவற்துறை பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் பெயரைக் கூறி கொலை அச்சறுத்தல் விடுத்ருதிந்தார்.அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்துறை பொலீசார் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை இன்றைய தினம்(20) புதன்கிழமை பதில் நீதவான் இ.சபேசன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.அதன் போது பதில்

இம்முறை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் தெளிவான ஆணை வழங்குவார்கள்- சிறிதரன்

Posted by - December 20, 2017

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் பல தடவைகள் ஆணை தந்திருப்பதாகவும், இம்முறையும் தமது ஆணைகளை மிகவும் தெளிவாக வழங்குவார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட பிரதேசசபைகளில் இன்றைய தினம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.மேலும் தெரிவிக்கும் போது; தமிழ் மக்களுடைய உரிமைக்கான பயணத்திற்கு மக்கள் தங்களது ஆணைகளை மிகவும் தெளிவாக வழங்குவார்கள்.வடக்கு, கிழக்கு இணைந்த சமஸ்டி அடிப்படையிலான தாயக மண்ணில் சுயாட்சியைப்

யாழில் ஏழு சபைகளுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்புமனுத் தாக்கல்

Posted by - December 20, 2017

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் 7 சபைகளுக்கான வேட்பு மனுக்களை இன்று (20)  தாக்கல் செய்தனர். அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வலிகாமம் மேற்குப் பிரதேச சபை, வலிகாமம் தெற்குப் பிரதேச சபை, சாவகச்சேரி பிரதேச சபை, வடமராட்சி தென்மேற்குப் பிரதேச சபை, பருத்தித்துறைப் பிரதேச சபை, ஆகிய சபைகளுக்கு தாக்கல் செய்தனர். அத்துடன் பருத்தித்துறை நகரசபை,

அழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

Posted by - December 20, 2017

அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனா். அம்பாறை, பொத்துவில் மண்மலையை அண்டிய ஜலால்தீன் சதுக்க கடற்கரைப் பிரதேசத்தில் குறித்த ஆணின் சடலம் நேற்று (19) மீட்கப்பட்டதாக பொத்துவில் பொலிசார் தெரிவித்துள்ளனர். பொத்துவில் P/03 கிராமசேவகர் பிரிவு மண்மலையை அண்டியிருக்கும் கடற்கரைப் பகுதியில் வளர்ப்பு மரங்கள் நிறைந்த பற்றைக்காட்டிற்குள் துர்வாடை வீசியதையடுத்து பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கமைவாகவே பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனா். அங்கு ஆணொருவரின் சடலம் அழுகிய நிலையில் காணப்பட்ட நிலையில் நேற்று(19) பகல் சடலத்தை

விமான எரிபொருள் தொடர்பில் பொய்யான பிரச்சாரம்: ஏமாற வேண்டாம் என கோரிக்கை

Posted by - December 20, 2017

விமானங்களுக்கான எரிபொருள் தொடர்பில் பல்வேறு நபர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் பொய்ப் பிரச்சாரங்களைக் கேட்டு ஏமாற வேண்டாம் என, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு கோரியுள்ளது. நாட்டினுள் நிலையற்ற தன்மையை ஏற்படுத்த முற்படும் சில தரப்பினரால், இதுபோன்ற தவறான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், உயர் தரத்திலான எரிபொருளை பெற்றுக் கொடுக்க தமது அமைச்சு தொடர்ந்தும் முன்நிற்கும் எனவும், பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் ஊடாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள

நல்லிணக்கத்தின் அலைவரிசை எனும் பெயரில் புதிய தமிழ் அலைவரிசை

Posted by - December 20, 2017

நல்லிணக்கத்தின் அலைவரிசை” எனும் பெயரில் புதிய தமிழ் அலைவரிசை ஒன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக பிறிதொரு அலைவரிசை எண்னொன்றும் வழங்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தமிழ் பிரிவான சனல் ஐ தொலைக்காட்சியில் அதிகமாக விளையாட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதனால், தமிழ் பேசும் மக்களுக்கான தேசிய தொலைக்காட்சி ஒன்றின் அவசியம் எழுந்துள்ளது. நாட்டில் நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புவதில் இவ்வாறான தொலைக்காட்சி அலைவரிசையொன்று தமிழில் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான தொழிநுட்ப உபகரணங்கள்

ஒன்றாக வந்தால் தலைமையையும் விட்டுக்கொடுக்கத் தயார்-வீ. ஆனந்தசங்கரி

Posted by - December 20, 2017

தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றார்கள். எனவே அவர்களின் விருப்பத்திற்கு அமைவாக எல்லோரும் ஒற்றுமையாக வந்தால் நான் தலைமையையும் விட்டுக்கொடுக்கத் தயார் என வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இன்று (20) கிளிநொச்சியில் உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் இந்த முறை தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றால் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று கடவுள்தான் சொல்ல வேண்டும். இன்றும் காலங்கடந்து விடவில்லை. மாறுபட்டு