4 பேர் தீக்குளித்து மரணம் – கார்ட்டூனிஸ்ட் கைது

Posted by - November 5, 2017

சென்னை : கந்துவட்டிக் கொடுமையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தது குறித்து முதல்வரை விமர்சித்து கார்ட்டூன் வரைந்த பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டுள்ளார். சமூக பிரச்னைகள் குறித்து சாடும் வகையில் கேலிச் சித்திரங்களாகவும் கருத்தாழமிக்க சித்திரங்களாகவும் படைத்து வருபவர் கார்ட்டூனிஸ்ட் பாலா. குமுதம் இதழில் சுமார் 10 ஆண்டுகளாக பணியாற்றிய இவர் தற்போது லைன்ஸ் மீடியா என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதன் மூலம் கார்ட்டூன்களையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகிறார். கடந்த அக்டோபர் 24ம்

ஏற்றுமதி அபிவிருத்தி நிறுவனங்களுக்கு வரி

Posted by - November 5, 2017

ஏற்றுமதி அபிவிருத்தி நிறுவனங்களுக்கு எதிர்வரும் வருடம் ஏப்ரல் மாதம் தொடக்கம் வரிச் சலுகை பெற்றுக்கொடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தெனியாய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது பிரதமர் இதனை குறிப்பிட்டார்.

டொனால்ட் ட்ரம்பை மீண்டும் எச்சரித்துள்ள வடகொரியா

Posted by - November 5, 2017

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆசிய நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில், வடகொரியா அவரை எச்சரித்துள்ளது. இந்த விஜயத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி தம்மை தேவையற்ற வகையில் விமர்சித்து வருவதை வடகொரியா கண்டித்துள்ளது. அவரின் நடவடிக்கைகள் வடகொரியாவின் ஸ்திர தன்மையை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயல்பாடுகள் மூலம் பாரதூரமான அணு ஆயுத தாக்குதல்களை அமெரிக்க நிலப்பரப்பு எதிர்கொள்ள வேண்டி வரும் எனவும் அந்த எச்சரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜப்பான் விஜயத்தின் போது, எந்த

10 வயது சிறுமியை துன்புறுத்தியதால் கைது

Posted by - November 5, 2017

பொகவந்தலாவை  போனோகோட் தோட்டத்தில் பத்துவயது சிறுமியை தாக்கி துன்புறுத்தலுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைதான குறித்த சிறுமியின் சிற்றன்னை மற்றும் மைத்துனர் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைதானவர்கள் இன்று ஹட்டன் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, அவர்களை எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிறுமியை துன்புறுத்திய குற்றச்சாட்டில் நேற்று அவர்கள் இருவரும் பொகவந்தலாவை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். சிறுமியின் தாய் வெளிநாட்டிலும், சிறுமியின் தந்தை கொழும்பிலும் பணிப்புரிந்து வரும்நிலையில், கடந்த வருடம்

சட்டத்தை மீறும் பொலிஸாருக்கு எதிராக கடும் நடவடிக்கை-புஜித ஜயசுந்த

Posted by - November 5, 2017

பொது மக்களின் பாதுகாப்புக்காக உள்ள பொலிஸ் படையில் உள்ளவர்கள் சட்டங்களை மீறினால் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்த தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். பொலிஸ் நிலையங்களுக்கு இன்னும் 10 ஆயிரம் பேர் இணைத்துக் கொள்ள வேண்டிய தேவையுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடுகளின் அரசியல் நிலைமை குறித்து கலந்துரையாடல்

Posted by - November 5, 2017

இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளின் அரசியல் நிலைமை குறித்து அமெரிக்க இராஜதந்திரிகள் இந்திய வெளிவிவகாரத்துறை சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளனர். கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப்பின் தலைமையிலான குழு இந்திய வெளிவிவகார செயலாளர் எஸ்.ஜெயசங்கருடன் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர். இலங்கைக்கு வழங்க வேண்டிய அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்புக்கள் தொடர்பாகவும் இந்த சந்திப்பில் உரையாடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலில் நேர்மையானவர்கள் இல்லை- சந்திரிக்கா

Posted by - November 5, 2017

நேர்மையானவர்கள் அரசியலுக்குள் பிரவேசிக்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார். வத்தளை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். நேர்மையானவர்கள் அரசியலுக்குள் பிரவேசிக்கும் போது, நாடு பொருளாதாரம் மற்றும் சிறந்த சமூகம் உள்ளிட்ட விடயங்களில் அபிவிருத்தி அடையும். சில வருடங்களாக நாட்டில் இவ்வாறானதொரு நிலை இருந்திருக்க வில்லை. எனவே தற்போது இவ்வாறானதொரு நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க குறிப்பிட்டார்.

கன மழை காரணமாக ,புதுக்குடியிருப்பு நகரம் வெள்ளத்தில் மூழ்கியது!

Posted by - November 5, 2017

அண்மைய நாட்களாக தொடந்துவரும் மழை  காரணமாகபுதுக்குடியிருப்பு நகரின்   பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது .நேற்று(4) இரவு பலமணி நேரமாக தொடர்மழை பெய்த நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு தாழ்வான பகுதிகள் பல நீரில் மூழ்கியுள்ளது. குறிப்பாக புதுக்குடியிருப்பு நகர்ப்பகுதி இந்த மழை காரணமாக மூழ்கியுள்ளதோடு பல வர்த்தக நிறுவனங்களுகுள்ளும் வெள்ளம் புகுந்துள்ளதோடு வர்த்தக நிலையங்கள் பலவற்றில் பொருட்கள் பல வெள்ளத்தில் மூழ்கி பாதிப்படைந்துள்ளது. வெள்ளத்தினை அகற்றி வரும் வர்த்தகர்கள் சீரான வடிகால் அமைப்புக்கள் இல்லாது தாம் தொடர்ந்து பாதிப்படைவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

முல்லைத்தீவு பிரதான பள்ளிவாசலில் துணிகர கொள்ளை

Posted by - November 5, 2017

முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள பிரதான  பள்ளிவாசலில் நேற்று(04) நள்ளிரவு துணிகர திருட்டு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது நேற்று நள்ளிரவு குறித்த பள்ளிவாசலுக்குள் புகுந்த திருடர்கள் பள்ளிவாசலில் காணப்பட்ட உண்டியல் ஒன்றினை பணத்துடன் தூக்கி சென்றுள்ளதோடு பள்ளிவாசலுக்கு வருகைதந்து தங்கியிருந்த யாத்திரிகர்களின் பணத்தையும் திருடி சென்றுள்ளனர் குறித்த திருட்டு சம்பவத்தை நடத்தியவர்களது நடவடிக்கைகள் சில அருகிலுள்ள உணவகத்தின் cctv கமராவில் பதிவாகியுள்ளது இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசாரும் விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரும் இணைந்து  விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது!

Posted by - November 5, 2017

வவுனியா பேரூந்து தரிப்பிடத்தில் கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து ஒரு கிலோ 324 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.