இனமுறுகல் ஏற்படும் அச்சம் – ஹக்கீம்

Posted by - January 4, 2017

அகழ்வாராச்சி என்ற போர்வையில் சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளால் இனங்களுக்கிடையிலான முறுகல் அதிகரிப்பதற்கான அச்சம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரபுக்கள் சபையின் உறுப்பினர் நெஸெபி பிரபுவிடம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்துள்ளார். அகழ்வாராய்ச்சி என்ற போர்வையில் சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனூடாக, பௌத்த வழிபாட்டுத் தளங்கள் அங்கு காணப்பட்டதற்கான நினைவுச் சின்னங்களும், தடையங்களும் இருப்பதாக வெளிக்காட்ட சில தரப்பினர்

போதையில் இருந்த காவல்துறை அதிகாரி கைது

Posted by - January 4, 2017

நல்லதண்ணி பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்தபோது மதுபோதையில் இருந்த காவல்துறை பரிசோதகர் ஒருவரை மஸ்கெலிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஹட்டன் காவல்நிலைய காவல்துறை பரிசோதகரே நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். சிவனொளிபாதமலை பருவகால விசேட சேவைக்காக சென்றிருந்த அவர் மதுபோதையில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கைதுசெய்யப்பட்டவரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மஸ்கெலிய காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

தலைவர் பதவியை ஏற்கும் தகுதி எனக்கு இல்லை – கங்குலி

Posted by - January 4, 2017

இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் பதவியை ஏற்கும் தகுதி தமக்கு இல்லை என்று முன்னாள் இந்திய அணித் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். லோதா குழுவின் பரிந்துரைகளை அமுலாக்க தவறியமைக்காக, கட்டுப்பாட்டுசபையின் தலைவர் அனுராக் தாகூர் இந்திய உயர் நீதிமன்றத்தினால் பதவி நீக்கப்பட்டார். இதனை அடுத்து, கங்குலியை தலைவராக நியமிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் யோசனை முன்வைத்துள்ளார். எவ்வாறாயினும், இதனை கங்குலி நிராகரித்துள்ளார். தற்போது பெங்கால் கிரிக்கட் சபையின் தலைவராக உள்ள

வடக்கு சிரிய வான் தாக்குதல் – 25 பேர் பலி

Posted by - January 4, 2017

வடக்கு சிரியாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் குறைந்த பட்சம் 25 பேர் பலியாகினர். எந்த தரப்பினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது தொடர்பில் உறுதியான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. வடக்கு சிரியாவில் இயங்கி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான நுஸ்ரா முன்னணியினர் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் தற்போது அமைதி உடன்படிக்கை அமுலாக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த உடன்படிக்கையில் நுஸ்ரா முன்னணி உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

5 ஆயிரம் ரூபா நாணயத் தாள்கள் – மத்திய வங்கி விளக்கமளிக்க வேண்டும்

Posted by - January 4, 2017

சட்டத்துக்கு புறம்பான முறையில் 5 ஆயிரம் ரூபா நாணயத் தாள்கள் ஆயிரத்து 300 கோடியை மத்திய வங்கி வெளியிட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு குறித்து மத்திய வங்கி ஆளுநரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியிடம் மஹிந்த அணியினர் நேற்று கையளித்துள்ள கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். 5 ஆயிரம் ரூபா நாணயத் தாள் விவகாரம் குறித்து

மாநாயக்க தேரர்களிடம் மஹிந்த அணி முறைப்பாடு

Posted by - January 4, 2017

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனமொன்றுக்கு வழங்குவதால் நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபகளுக்கு மஹிந்த அணியினரால் நேற்றுத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள் நேற்று இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்தத் திட்டத்தினூடாக ஏற்படவுள்ள பாதிப்புகள் குறித்து அரசாங்கத்துக்கு தெளிவுபடுத்துமாறு மாநாயக்க தேரர்களிடம் மஹிந்த அணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த உடன்படிக்கை குறித்து நாடாளுமன்றத்துக்கும், அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் துறைமுக அமைச்சருக்கும் தெரியவில்லை என்று சமல்

ரவிராஜ் வழக்குத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடிவு

Posted by - January 4, 2017

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் வழக்குத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய சட்ட மா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர் ஜயந்த ஜெயசூரியவை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. குறித்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஐந்து பேரும் குற்றமற்றவர்கள் என்று தெரிவித்து கடந்த மாதம் 24ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்குத் தீர்ப்பின் பிரதியை தமக்கு வழங்குமாறு

இந்தியாவுடனான உடன்படிக்கை மீளாய்வு – சந்திம வீரக்கொடி

Posted by - January 4, 2017

இலங்கையின் எண்ணெய் களஞ்சிய தாங்கிகள் தொடர்பில் 2002ஆம் ஆண்டு இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கை தொடர்பில் மீள்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. கனியவளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி இதனைத் தெரிவித்துள்ளார். இந்த உடன்படிக்கையின் கீழ் திருகோணமலையில் உள்ள குறித்த எண்ணெய்த் தாங்கிகள் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை பயன்படுத்தப்படாதுள்ளன. இந்த நிலையில், மீளமைப்பின் பின்னர் சுமார் 50 தாங்கிகளை இலங்கையின் பயன்பாட்டுக்கு பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படவிருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார். குறித்த தாங்கிகள் 2ம் உலகப்போர்

அறிக்கையில் கைச்சாத்திடாதோர் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் – ஜே.வி.பி.

Posted by - January 4, 2017

எல்லை மீள்நிர்ணய அறிக்கையில் கைச்சாத்திடாதுள்ள இரண்டு உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஜே வி பி வலியுறுத்தியுள்ளது. அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனைத வலியுறுத்தியுள்ளார். கடந்த அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட எல்லை மீள்நிர்ணய அறிக்கை பசில் ராஜபக்ஷவினால் அரசியல் லாப நோக்கில் உருவாக்கப்பட்டது. இது குழப்பம் நிறைந்ததாக காணப்பட்டதாலேயே புதிய அறிக்கையை தயாரிப்பதற்கான ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் கைச்சாத்திடாததால், அதன் அறிக்கையை அமைச்சர் பைசர் முஸ்தபா நிராகரித்திருந்தார். எனவே, குறித்த

புகையிரதத்தில் குண்டுப்புரளி! யுவதி கைது!

Posted by - January 4, 2017

கடந்த வாரம், கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரதத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறி போலியான தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட குற்றச்சாட்டின்பேரில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.