கினிகத்தேனை-அம்பகமுவ பிரதேசபகுதியில் திடீர் தீ விபத்தில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியது(காணொளி)

Posted by - January 7, 2017

நுவரெலியா கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட கினிகத்தேனை-அம்பகமுவ பிரதேசபகுதியில்  இன்று அதிகாலை 1.00 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்தவீட்டில் இருந்த  05 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தீ ஏற்பட்டபோது வீட்டில் இவர்கள் நித்திரை கொண்டிருந்ததாகவும், பிறகு எரிவதை கண்டு கூச்சலிட்டதாகவும், அதன்பிறகு அயலவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க

ஜனாதிபதிக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டியும் மழை வேண்டியும் பிரித் பிரயாணம்(படங்கள்)

Posted by - January 7, 2017

ஜனாதிபதிக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டியும் மழை வேண்டியும் பிரித் பிரயாணம் ஒன்று நேற்று இரவு ஹற்றன் டிக்கோயா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு ஜனாதிபதிக்கும், நாட்டு மக்களுக்கும்  நல்லாசி வேண்டியும் மழை வேண்டியும் பிரித் பிரயாணம் ஒன்று நேற்று இரவு ஹற்றன் டிக்கோயா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. நுவரெலியா மாவட்ட அமைப்பாளர்களான ட்பளியூ.ஜேரணசிங்க மற்றும் தர்மபிரியவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பிரித் பிரயாணத்திற்கு தமிழ் மற்றும்

இறக்குமதியின்போது விதிக்கப்படும் வரிகளை உடனடியாகக் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்

Posted by - January 7, 2017

அரிசி இறக்குமதியின்போது விதிக்கப்படும் இறக்குமதி வரிகளை உடனடியாகக் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த வரிக் குறைப்பு நேற்றிரவு முதல் அமுலுக்கு வருவதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது. வாழ்க்கைச் செலவு தொடர்பில் நேற்று மாலை நிதியமைச்சில் நடைபெற்ற அமைச்சரவையின் உபகுழுக் கூட்டத்தின் போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரிசி இறக்குமதியின்போது ஒரு கிலோ அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த சுங்க வரி 50 ரூபாவாலும்,  வற் வரி 15 சதவீதத்தாலும்,  துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி 7.5 சதவீதத்தாலும், தேசத்தை

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி உயிரியல் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்

Posted by - January 7, 2017

இன்று வெளியாகிய கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பீட்சை பெறுபேறுகளில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி உயிரியல் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். வேம்படி  மகளிர் உயர்தார் பாடசாலை மாணவி செல்வி அம்சா தனஞ்செயன் எனும் மாணவி 3ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலாம் இடத்;தைப் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் உயர்தரப்பரீட்சையில் கணித துறையில் மாவட்ட ரீதியில் முதலாம் இடம்

Posted by - January 7, 2017

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையில் கணித துறையில் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது. கணிதத்துறை 3ஏ சித்திகளைப் பெற்று கஜரோகணன் கஜானன் என்றமாணவன் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். கணித துறையில் இரவீந்திரன் பானுப்பிரியன் மூன்றாம் இடத்தையும், சிவபாலன் சங்கீர்த்தன் நான்காம் இடத்தையும், செல்வரத்தினம் லாவர்த்தன் ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளதாக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் அதிபர் ஐ.தயானந்தராஜா தெரிவித்துள்ளார். உயிரியல் துறையில் திருஞானசம்பந்தன் ஆகாசன் மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடத்தையும் யோகந்திரராசா சாகித்தியன் நான்காம்

 மன்னார் மாவட்டத்தில் இரவு நேரங்களில் சுழியோடி கடலட்டை பிடிப்பதற்கு கடற்படையினர் அனுமதி மறுப்பு

Posted by - January 7, 2017

மன்னார் மாவட்டத்தில் தென் கடலில் இரவு நேரங்களில் சுழியோடி கடலட்டை பிடிப்பதற்கு கடற்படையினர் அனுமதி மறுத்து வருவதாக கடலட்டை பிடிக்கும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் தென் கடலில் இரவு நேரங்களில் சுழியோடி கடலட்டை பிடிப்பதற்கு மன்னார் கடற்தொழில் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ள போதும் கடற்படையினர் தொடர்ந்தும் அனுமதி மறுத்து வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் தென்கடல் பகுதியில் நீண்ட காலமாக இரவு நேரங்களில் மீனவர்கள் சுழியோடி கடலட்டை பிடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

மட்டக்களப்பில் கராத்தே வீரர்கள் பங்குபற்றும் இரண்டு நாள் கராத்தே சுற்றுப்போட்டி இன்று ஆரம்பம்

Posted by - January 7, 2017

வடகிழக்கு கராத்தே வீரர்கள் பங்குபற்றும் இரண்டு நாள் கராத்தே சுற்றுப்போட்டியும், கராத்தே பயிற்சி முகாமும் இன்று மட்டக்களப்பில் ஆரம்பமானது. மட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு அரசடியில் உள்ள சோட்டக்கன் கராத்தே சங்க பாடசாலையில் இன்று காலை ஆரம்பமானது. சர்வதேச கராத்தே சம்பியனும், உலக கராத்தே சங்கத்தின் தலைவருமான பவல் பொம்பலோஸ்ஹி மற்றும் பிரித்தானிய சோட்டாக்கன் கராத்தே கல்லூரியின் பிரதான பயிற்றுவிப்பாளர் எஸ்.கணேசலிங்கம் ஆகியோர் இந்த பயிற்சிகளை நடாத்துவதுடன், போட்டிகளையும் நடாத்துகின்றனர். இதன்

இன்று சிவத்தழிழ்ச்செல்வி பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டியின் 92வது பிறந்த நாள்(காணொளி)

Posted by - January 7, 2017

அன்னை தங்கம்மா அப்பாக்குட்டியின் 92ஆவது பிறந்த தின அறக்கொடை நிகழ்வில்; சான்றோர் ஐவருக்கு சிவத்தழிழ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இன்று தெல்லிப்பழை துர்காதேவி ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற சிவத்தழிழ்ச்செல்வி பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டியின் 92வது பிறந்த நாள் அறக்கொடை விழாவில் சான்றோர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் அருணாசலம் சண்முகதாஸ், வைத்திய கலாநிதி சேனாதிராஜா ஆனந்தராஜா, பொன்னாலைப் பண்டிதர் பொ.தி.பொன்னம்பலவாணர், நாதஸ்வர வித்துவான் எம்.பி.பாலகிருஸ்ணன் மற்றும் இளைப்பாறிய ஆசிரியை பண்டிதை திருமதி.மகாதேவி

நுவரெலியா தோட்டப் பகுதிகளில் விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு (காணொளி)

Posted by - January 7, 2017

நுவரெலியா தோட்டப் பகுதிகளில், பதிவு செய்யப்பட்ட 49 விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் கொட்டகலை ரிஷிகேஷ் மண்டபத்தில் இடம்பெற்ற மூன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் குறித்த நிகழ்வில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், மத்திய மாகாண விவசாயதுறை அமைச்சர் எம்.ரமேஷ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் ஆகியோருடன் முன்னாள் உறுப்பினர்கள் எஸ்.அருள்சாமி,

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பொதுமக்கள் முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது, ஏற்பட்ட குழப்பத்தில் 21 பேர் காயமடைந்தனர்.(காணொளி)

Posted by - January 7, 2017

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பொதுமக்கள் முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது, ஏற்பட்ட குழப்பத்தில் காயமடைந்த 21 பேர் ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டை முதலீட்டு ஊக்குவிப்பு வலய திறப்பு நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று நடைபெற்றதை அடுத்து, ஹம்பாந்தோட்டையின் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் அல்லது கூட்டங்களை நடத்த நேற்று நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், ஹம்பாந்தோட்டை முதலீட்டு ஊக்குவிப்பு வலய பிரதேசத்திற்கு அருகில் இன்று காலை எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றதுடன், அந்த வலயத்திற்கு