ஹம்பாந்தோட்டை முதலீட்டு ஊக்குவிப்பு வலய பிரதேசத்தில் பதற்ற நிலை

Posted by - January 7, 2017

ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை முதலீட்டு ஊக்குவிப்பு வலய திறப்பு நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று இடம்பெற்றது. இதனையடுத்து ஹம்பாந்தோட்டையின் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் அல்லது கூட்டங்களை நடத்த நேற்று நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. எவ்வாறாயினும் அங்கு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறியிருந்தார். இதனையடுத்து இன்று காலை ஹம்பாந்தோட்டை முதலீட்டு ஊக்குவிப்பு வலய பிரதேசத்திற்கு அண்மையில் எதிர்ப்பு நடவடிக்கையில்

மீனவர் பிரச்சினைக்கான தீர்வு காண்பதற்கு பொறிமுறை

Posted by - January 7, 2017

இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை குறித்து பேச்சுக்கள் நடத்துவதற்காக கொழும்பு வந்திருந்த இந்திய வெளியுறவு இணைச் செயலர் சஞ்சய் பாண்டே பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான பொறிமுறை உருவாக்கப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். கொழும்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் பேச்சுக்கள் நடத்திய பின்னர் அவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். இந்திய நிதி உதவியின் கீழ் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள வேலைத்திட்டங்களைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இருநாட்டுப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய இணை செயற்பாட்டு குழு

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன

Posted by - January 7, 2017

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளன. குறித்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைத் திணைக்களத்தின் இணைய முகவரியில் பார்வையிட முடியும். பெறுபேறுகளை முறையாக பெற்றுக்கொள்வதற்கு குறிப்பிடப்பட்ட இடத்தில் சரியாக சுட்டெண்ணை உள்ளடக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை பெறுபேறுகள் தொடர்பிலான மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள 0112 784208 , 011 2784537, 011 3188350, 011 3140314 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்த முடியும் என பரீட்சைகள் திணைக்களம்

இலங்கை வரும் ஆந்திர முதல்வர்

Posted by - January 7, 2017

இந்தியாவின் ஆந்திரப்பிரதேச முதல்வரான ஸ்ரீ சந்திரபாபு நாயுடு இன்று இலங்கை வரவுள்ளார். இன்று மாலை அவர் இலங்கை வரும் இவர்,நாளை நடைபெறவுள்ள’எதிர்கால அபிவிருத்திக்கு இரண்டு வருட திட்டங்கள்’என்னும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்வதற்காகவே இலங்கை வரவுள்ளதாகவும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாளைய தினம் இவர் ஹோமாகம பிட்டிபன பகுதியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட தெற்காசியாவின் முதலாவது பசுமை பல்கலைக்கழகத்தையும் பார்வையிடவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டரம்பின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ள அமெரிக்க நாடாளுமன்றம்

Posted by - January 7, 2017

நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் டரம்பின் வெற்றியை அமெரிக்க நாடாளுமன்றம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பான முறைப்படியான அறிவிப்பை அமெரிக்க நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் பிரதிநிதிகள் அவையின் கூட்டுக் கூட்டத் தொடரின்போது அந்நாட்டின் துணை ஜனாதிபதி ஜோ பிடன் வெளியிட்டுள்ளார். ஜோ பிடன் அதிகாரபூர்வமாக அறிவிப்பை அடுத்து சிறிய கட்சிகளை சேர்ந்த சில உறுப்பினர்கள் அமைதியற்று செயற்பட்டதையடுத்து அவைக் காவலர்களால் அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இது சம்பிரதாய ரீதியான அறிவிப்பாக கருதப்பட்டாலும்இ

சசிகலா, நாஞ்சில் திடிர் சந்திப்பு

Posted by - January 7, 2017

அதிமுக வின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் மற்றும் கட்சியின் சசிகலாவிற்கு இடையில் இன்று திடிர சந்திப்பு இடம்பெற்றுள்ளது. எனினும் சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதா பரிசாக தந்த இனோவா காரை அதிமுக தலைமை அலுவலகத்தில் திருப்பி ஒப்படைத்திருந்த நிலையில் அவர் கட்சியை விட்டு விலகி திமுக வில் இணையப்போவதாகவும் வதந்திகள் வெளியானது நாஞ்சில் சம்பத் அதிமுக வில் இருந்த விலகுவாதா வந்த தகவலையடுத்து சசிகலாவை போயஸ் கார்டன் இல்லத்தில் திடீரென சந்தித்த பேசினார். இந்த சந்திப்பு

ஃப்ளோரிடாவில் தாக்குதல் நடத்தியவர் கைது

Posted by - January 7, 2017

5 பேர் கொல்லப்பட்ட, 8 பேர் காயமடைந்த ஃபோர்ட் லௌடர்டேட் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படுபவரை கைது செய்யப்பட்டுள்ளார். உடைமைகளை எடுக்கின்ற இடத்தில் வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கான நோக்கம் இதுவரை தெரியவில்லை. அமெரிக்க இராணுவ அடையாளத்தை வைத்திருந்தவரும், ஈராக்கில் பணியாற்றியவருமான எஸ்டாபன் சன்டியாகோ சந்தேக நபராக பிடித்து வைக்கப்பட்டுள்ளார், சன்டியாகோ வசித்து வருகின்ற அலாஸ்காவிலுள்ள அமெரிக்க மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள், இவருடைய தீவிர நடத்தையை கண்டு கடந்த நவம்பர் மாதம் மனநல சிகிச்சைக்கு

சிரியா கார் குண்டு வெடிப்பில் 16 பேர் பலி

Posted by - January 7, 2017

சிரியாவின் மக்கள் நடமாட்டம் உள்ள ஜிபிலே நகரில் இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள குறித்த நகரத்தில் இந்த கார் குணடுத் தாக்குதலினால் 25 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் சிரிய தகவல்கள் தெரிவித்துள்ளன. குறித்த நகரத்தில் உள்ள மைதானம் ஒன்றிட்கு அருகிலேயே இந்த குண்டுத்தாக்கதல் இடம்பெற்றுள்ளதாகவும்,இது ஒரு தற்கொலைத் தாக்குதலாக இருக்கலாம் எனவும் சிரிய அரச சேவை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பில் பலியானவர்கள் பொதுமக்களா? சிரிய அரச

மீண்டும் எல்லை நிர்ணயம் தொடர்பான மேன்முறையீட்டு அறிக்கை பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கும் நடவடிக்கை பிற்போடப்பட்டது

Posted by - January 7, 2017

எல்லை நிர்ணயம் தொடர்பான மேன்முறையீட்டு அறிக்கை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கும் நடவடிக்கை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை நேற்றைய தினம் சமர்ப்பிக்கவிருந்ததாக எல்லை நிர்ணய மேன்முறையீட்டு குழுவின் தலைவர் அசோக பீரிஸ் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறியிடம் அறிவித்துள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த அறிக்கையை பெற்றுக் கொள்ள விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பைசர் முஸ்தபா தயாராக இருந்ததாகவும், ஆனால் குழுவின் தலைவர் அறிக்கையை நேற்றைய தினம் சமர்ப்பிக்கவில்லை எனவும்

வவுனியா மவாட்டத்தில் கணிதம், விஞ்ஞானம், கலைப்பிரிவுகளில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் மாவட்ட மட்டத்தில் முதலாமிடம்

Posted by - January 7, 2017

  வவுனியா மவாட்டத்தில் கணிதம், விஞ்ஞானம், கலைப்பிரிவுகளில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினை பெற்றுள்ளனர். கணித பிரிவில் அண்மையில் விபத்தில் பலியான சத்தியநாதன் சிவதுர்க்கா என்ற மாணவி 3 ஏ சித்திகளை பெற்று,  மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும், துவாரகா பகிரதன் 3 ஏ பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாமிடத்தினையும் பெற்றுள்ளனர். விஞ்ஞான பிரிவில் மதுரா தனபாலசிங்கம் 3 ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் பவதாரனி சிவபாலராஸா 3 ஏ