செட்டிகுளம், அருவித்தோட்டம் சிவானந்த வித்தியாலய மாணவர்களின் பெற்றோர் பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - January 9, 2017

வவுனியா, செட்டிகுளம், அருவித்தோட்டம் சிவானந்த வித்தியாலய மாணவர்களின் பெற்றோர் இன்று பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். குறித்த பாடசாலையில் 538இற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்ற போதும் 15 ஆசிரியர்கள் மாத்திரமே கற்பிக்கின்றனர் என்றும், பின் தங்கிய குறித்த பாசாலையில் தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பல பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதால் மாணவர்கள் கல்வியை தொடர முடியாத நிலை காணப்படுகின்றது என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் சுட்டிக்காட்டினர். குறித்த பாடசாலையில் இடப்பற்றாக்குறை, தளபாடப் பற்றாக்குறை என்பன

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் தடையின்றி இடம்பெறுகின்றன

Posted by - January 9, 2017

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள், தடையின்றி இடம்பெறுவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டுநாயக்க சர்வசே விமான நிலையத்தின் ஓடுபாதையில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளமையினால் விசேட போக்குவர்த்து நடைமுறை கடந்த 3 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன்படி விமான நிலையத்துக்கு வருகை தரும் பயணிகளின் சிரமத்தை குறைக்கும் விதமாக காலை 8.30 தொடக்கம் பிற்பகல் 4.30 மணிவரை விசேட போக்குவரத்து நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. விமான ஓடுபாதையின் நவீனமயப்படுத்தல் நடவடிக்கைகள் 06ஆம் திகதி ஆரம்பிக்கபட்டதுடன், இதன் பணிகள், எதிர்வரும்

ஹொரவப்பொத்தான பகுதியில் புத்தர் சிலைகள் மூன்று, இனந்தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளன.

Posted by - January 9, 2017

திருகோணமலை-ஹொரவப்பொத்தான பிரதான வீதியோரத்தில் கட்டப்பட்டிருந்த புத்தர் சிலைகள் மூன்று, இனந்தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வில்கம் விஹாரை-மொறவெவ மற்றும் திரியாய் சந்தியிலுள்ள புத்தர் சிலைகளே, இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளன.மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், மொறவெவ நகரத்திலிருந்த புத்தர் சிலையை உடைத்துச் செல்லும் காட்சிகள், அங்கு பொருத்தப்பட்டிருந்த சீசீடிவி கமராவில் பதிவாகியுள்ளன எனினும், மோட்டார் சைக்கிளின் இலக்கமோ அல்லது உடைப்பவர்களையோ இனங்கான முடியாத நிலையில் அந்தக் காட்சி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொறவெவ பிரதேசத்தில் மூவின மக்களும் ஒற்றுமையாகவும் ஒரே

களுத்துறையில் தொலைபேசி விநியோக பிரதிநிதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.

Posted by - January 9, 2017

களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த தொலைபேசி விநியோக பிரதிநிதி ஒருவர், தனது கார் மற்றும் 44 இலட்சம் ரூபாய் பெறுமதியான தொலைபேசிகள் மற்றும் 7 இலட்சம் ரூபாய் பணம் என்பவற்றுடன் கடத்திச் செல்லப்பட்டார். கடத்திச் செல்லப்பட்டர் கொலன்னாவை பிரதேசத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளார்.குறித்த நபர் களுத்துறைக்குச் சென்ற நிலையில், நான்கு பேர் அடங்கிய குழுவினரால கடத்திச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபரிடமிருந்த பணம், கையடக்க தொலைபேசிகள் மற்றும் கார் என்பவற்றை கடத்தல் காரர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சந்தேகநபர்களை

பலாலி அன்ரனிபுரம் கிராமத்தில் 135 வீடுகள் அமைக்கப்பட்டு, இடம்பெயர்ந்த அப்பகுதி மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்(காணொளி)

Posted by - January 9, 2017

  யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பலாலி அன்ரனிபுரம் கிராமத்தில் 135 வீடுகள் அமைக்கப்பட்டு, இடம்பெயர்ந்த அப்பகுதி மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 1990ஆம் இடம்பெயர்ந்து முகாம் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கியிருந்த மக்களுக்கான வீடுகள் அமைக்கப்பட்டு, குறித்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். 2015 டிசம்பர் மாதம் பலாலி வடக்கு அன்ரனிபுரம் பகுதி விடுவிக்கப்பட்டு கடந்த வருடம் யூன் மாதம் 135 வீடுகளுக்கான அத்திவாரம் இடப்பட்டு கிராம அபிவிருத்தி திட்டமாக வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் செம்மணிப்பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் காயமடைந்தார்(காணொளி)

Posted by - January 9, 2017

யாழ்ப்பாணம் செம்மணிப்பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்தொன்றில் காயப்பட்ட ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்று நோக்கி சென்ற பேரூந்தில் மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்த இளைஞர்களில் ஒருவர் காயமடைந்துள்ளார். செம்மணி வீதியிலிருந்து மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்த இளைஞர்கள் கண்டி வீதியினுடாக அரியாலை நோக்கி திரும்பிய போது யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்று நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

ஆட்சியை கவிழ்த்து விடலாம் என எண்ணிக்கொண்டிருப்பது கனவு மாத்திரமே – ஜனாதிபதி

Posted by - January 9, 2017

ஆட்சியை கவிழ்த்து விடலாம் என கனவு கண்டு கொண்டிக்கும் எவருக்கும் அது நடக்காது என்பதை நான் தீர்மானமாக தெரிவித்துக் கொள்கின்றேன் என ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி பதவி ஏற்றுக் கொண்டு இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு பண்டாரநாயக்க மண்டபத்தில் நேற்று இடம் பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனக் கூறினார். மேலும் அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போது, ஆட்சியை கவிழ்த்து விடலாம் என எண்ணிக்கொண்டிருப்பது வெறும் கனவு மாத்திரமே அது ஒரு போதும்

இன்று எல்லை நிர்­ணய குழுவின் அறிக்­கை கையளிப்பு

Posted by - January 9, 2017

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான எல்லை நிர்­ணய குழுவின் அறிக்­கையில் பல்­வேறு குறை­பா­டுகள் இருப்­ப­தாகதெரி­ய­வ­ரு­கின்­ற நிலையில் இன்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டமும் கட்சி தலை­வர்­க­ளி­டமும் எல்லை நிர்­ணய அறிக்கை கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக பிர­தமர் அலு­வ­லக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.இதன்­படி கட்சி தலை­வர்­க­ளினால் இன்­றைய தினம் அறிக்கை தொடர்பில் இறுதி தீர்­மானம் எடுக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழுவின் அறிக்கை அண்­மையில் மாகாண மற்றும்உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­த­பா­விற்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டது. எனினும் சுதந்­திரக் கட்சி

சரத் குமார குணரத்னவின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - January 9, 2017

முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்னவை, இந்த மாதம் 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் உத்தரவிட்டுள்ளார். முன்னாள் பிரதி அமைச்சர் ,குற்றபுலனாய்வு பிரிவினரால் இந்த மாதம் 02 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். நீர்கொழும்பு கடல்நீரேரி வளர்ச்சி யோசனை நடவடிக்கைக்கு வழங்கிய ரூபாய் 112 இலட்சத்தினை மோசடி செய்த