தபால் மூலம் நடாத்தப்படும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் விசாரணை

Posted by - January 12, 2017

தபால் மூலம் நடாத்தப்படும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வெளிநாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த பொதியொன்றில் 84 கிராம் ஹசிஸ் மற்றும் 1358 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தபால் மாஅதிபர் ரோஹண அபேரத்ன தெரிவித்துள்ளார். மத்திய தபால் பரிமாற்று நிலையத்தில் நடாத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த பொதி ஸ்பெயினிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இரவு

ஹற்றன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்துக்கு கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான சீமெந்துப் பைக்கற்றுக்கள்

Posted by - January 12, 2017

  ஹற்றன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்துக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான சீமெந்துப் பைக்கற்றுக்கள் இன்று வழங்கப்பட்டன. ஹற்றன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்துக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான சீமெந்துப் பைக்கற்றுக்கள் வழங்கும் நிகழ்வு இன்று காலை மத்திய மாகாண விவசாய மீன்பிடி கால்நடை, தோட்ட உட்கட்டமைப்பு, இந்துக்கலாசார அமைச்சர் எம்.ரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. தற்போது புனர்நிர்மானம் செய்யப்பட்டு வரும் ஆலயத்துக்கு சீமெந்து தேவைப்படுவதாக ஆலய பரிபாலனசபையினர் விடுத்த வேண்டுகோளை அடுத்தே சீமெந்துப் பைக்கற்றுக்கள் அமைச்சரினால் வழங்கி

கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டப்பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

Posted by - January 12, 2017

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டப்பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள – பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். உறவினர் வீட்டுக்கு சென்றபோது வழியில் மரத்தில் இருந்த குளவி கூடு கலைந்து வந்து இவரை கொட்டியுள்ளது. குளவி கொட்டியதில் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இருந்தும் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக

இனந்தெரியாதோரால் நோர்வூட் கோர்த்தி தோட்ட பாதுகாப்பு வனப்பகுதிக்கு வைக்கப்பட்ட தீ(காணொளி)

Posted by - January 12, 2017

நோர்வூட் கோர்த்தி தோட்ட பாதுகாப்பு வனப்பகுதிக்கு வைக்கப்பட்ட தீயால் பல ஏக்கர் வனப்பகுதி எரிந்து  நாசமாகியுள்ளன. நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்க பகுதியில் நேற்று இரவு 6.30 மணியளவில் இனந்தெரியாதோரால் நோர்வூட் கோர்த்தி தோட்ட பாதுகாப்பு வனப்பகுதிக்கு வைக்கப்பட்ட தீயால் பல ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. நீரேந்தும் பிரதேச காட்டுப்பகுதியில் தீ ஏற்பட்டதன் காரணமாக நீரூற்றுக்கள் அற்றுப் போகும் அபாயம் காணப்படுகின்றது. தற்போது நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைந்து வரும் நிலையில் மின்சார

வசிம் அக்ரமை உடனடியாக கைது செய்யுமாறு அந்த நாட்டு நீதிமன்றம் பிடியாணை

Posted by - January 12, 2017

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், அரசியல் செயற்பாட்டாளருமான வசிம் அக்ரமை உடனடியாக கைது செய்யுமாறு அந்த நாட்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. வசிம் அக்ரமினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றிற்கு, அவரே 31 தடவைகள் சமூகமளிக்காததை அடுத்தே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற வாகன விபத்தொன்று தொடர்பில் ஓய்வூபெற்ற மேஜருக்கு எதிராக வசிம் அக்ரம் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார். வசிம் அக்ரமினால் செலுத்தப்பட்ட கார், ஓய்வூ பெற்ற மேஜருக்கு சொந்தமான வாகனமொன்றுடன்

விக்கிரமசிங்க சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம்

Posted by - January 12, 2017

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு தயாரிக்கப்பட்டுள்ள கொள்கைகள் மற்றும் சட்டக் கட்டமைப்பை, தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற மேற்பார்வை செயற்குழுவுக்கு ஆற்றுப்படுத்தி, சிபார்சுகளை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. பிரதமர் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தில், பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் தாக்குதல்களிலிருந்து இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் மக்களைப் பாதுகாத்தல், இலங்கையின் ஐக்கியம், ஒருமைப்பாடு மற்றும் சுயாதீனத்தை பாதுகாக்கவும், வெளிநாடுகளில் இடம்பெறும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு

மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிட முடியும்- இசுறு தேவப்பிரிய

Posted by - January 12, 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திர கட்சியின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் அவர் போட்டியிட முடியும் என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார். மேல் மாகாண முதலமைச்சர் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே இசுறு தேவரப்பிரிய இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போது பொதுவேட்பாளர் இல்லை எனவும், அவர் சுதந்திர கட்சியின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதித் தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிட

யாழ்ப்பாண மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் 2016 சாதனைபடைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்

Posted by - January 12, 2017

கல்விப் பொதுத் தராதர உயர்தரம் 2016 பரீட்சையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சாதனைபடைத்த மாணவர்கள் இன்று கௌரவிக்கப்பட்டனர். வழிகாட்டி அமைப்பினால் கல்வி பொதுத் தராதர சாதாரண தர மாணவர்களுக்கு உயர்தரத்தில் தெரிவு செய்யப்படவுள்ள பாடநெறிகள், பாடநெறியில் உள்ளடங்கும் விடயங்கள், கற்கை நுட்பங்கள், பல்கலைக்கழக தெரிவிற்கு இலகுவான வழிகள் போன்றவற்றை உள்ளடக்கிய வழிகாட்டி கருத்தரங்கில் சாதனைபடைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். உயர்தர வழிகாட்டி கருத்தரங்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறுகிறது.பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் தேசிய மட்டம், மாவட்ட மட்டத்தில் 1ஆம் இடத்தை

பர்தா ஆடை விற்பனை, உற்பத்தி மற்றும் இறக்குமதி ஆகியவற்றுக்கு மொறோக்கே தடை

Posted by - January 12, 2017

பர்தா ஆடை விற்பனை, உற்பத்தி மற்றும் இறக்குமதி ஆகியவற்றுக்கு மொறோக்கே தடை விதித்துள்ளது. எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் தம்மிடமுள்ள அனைத்து ஆடைகளையும் விற்பனை செய்து நிறைவு சய்யுமாறு அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு காரணங்களின் நிமிர்த்தம் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளதாக பீ.பீ.சி செய்தி வெளியிட்டுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்காக பர்தா ஆடை பயன்படுத்தப்படுவதாக அந்த நாட்டின் உள்விவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி

2017 ஆம் ஆண்டை புனித ஜோசப் வாஸ் அடிகளார் வருடமாக, கொழும்பு பேராயர் அலுவலகம், பிரகடனம்

Posted by - January 12, 2017

2017 ஆம் ஆண்டை புனித ஜோசப் வாஸ் அடிகளார் வருடமாக, கொழும்பு பேராயர் அலுவலகம், பிரகடனப்படுத்தியுள்ளது. கொழும்பு பேராயர் இல்லத்தில், நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, இவ்வாறு அறிவிக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டை புனித ஜோசப் வாஸ் அடிகளார் வருடமாக, கொழும்பு பேராயர் அலுவலகம், பிரகடனப்படுத்தியது தொடர்பான அறிவித்தலை, கொழும்புப் பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை விடுத்துள்ளார். வழிபாடுகளை நிலைப்படுத்துவதற்கு வாஸ் அடிகளார் வழியில் செயற்படுங்கள் என்ற தொனிப்பொருளின் கீழ், இவ்வருடத்துக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும்