இலங்கை அரசாங்கம் நல்லிணக்க செயலணியின் பரிந்துரை அறிக்கையை தொடர்ந்தும் புறக்கணித்து வருகின்றது- எம்னெஸ்டி இன்டர் நேஷனல்
நல்லிணக்க செயலணியின் பரிந்துரை அறிக்கையை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் புறக்கணித்து வருகின்றமையானது, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நியாயம் நிலைநாட்டப்படுகின்றமை எட்டாக்கனியாக இருக்கும் என எம்னெஸ்டி இன்டர் நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது. யுத்தத்தின் போது ஏற்பட்ட உயிரிழப்புக்கள், காணாமல் போனோரின் குடும்பங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுக்கு உரிய நியாயம், உண்மை மற்றும் இழப்பீடுகள் கிடைக்கின்றமை எட்டாக்கனியாக இருக்கும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச சட்டவிதிமுறைகளுக்கு அமைய ஸ்தாபிக்கப்பட்டுள்ள நல்லிணக்க செயலணியின் கண்டுபிடிப்புக்கள் அடங்கிய அறிக்கையை, இலங்கை

