கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு

Posted by - February 5, 2017

முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் இன்று ஆறாவது நாளாகவும் தமது போராட்டத்தை தொடர்கின்றனர். கேப்பாப்புலவு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான போராட்டம் தொடர்பில் யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிகப்பீட மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு தொடர்பாக பல்கலைக்கழக மாணவர் குழு இன்று நேரில் அங்கு சென்று அறிவித்துள்ளனர். கேப்பாப்புலவு மக்களை அவர்களின் சொந்தக்காணிகளில் மீள்குடியேற்றக்கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கின்றோம். இதேவேளை நல்லாட்சி அரசாங்கம் இம்மக்களின் நியாயமான போராட்டத்தினை ஏற்று குறித்த மக்களை அப்பிரதேசத்தில் மீள்குடியேற்றி

மறைந்த ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 11 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு

Posted by - February 5, 2017

மறைந்த ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 11 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வும் படுகொலை செய்யப்பட்ட 44 ஊடகவியலாளர்களுக்கும் நீதியான விசாரணை கோரி கவனயீர்ப்புப் போராட்டமும், மட்டக்களப்பில் நடைபெற்றன. மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவுக்கு முன்னால், இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. ஊடகச் செயற்பாட்டுக்கான சுதந்திர இயக்கம், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இணைந்து, இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த நினைவு அஞ்சலி நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டடைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்,

முறக்கொட்டாஞ்சேனையில் தீ விபத்தினால் வீட்டை இழந்தவர்களுக்கு உதவித்திட்டம்

Posted by - February 5, 2017

முறக்கொட்டாஞ்சேனையில் அண்மையில் தீக்கிரையான வீட்டின் உரிமையாளர்களுக்கு துணிகளை கொள்வனவு செய்வதற்காக ஒரு தொகை நிதியுதவியும், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள பாடசாலை உபகரணங்களும் முனைப்பு நிறுவனத்தினால் இன்று  வழங்கி வைக்கப்பட்டுள்ளது. முனைப்பின் தலைவர் மா.சசிகுமார் செயலாளர் சி.குகநாதன், பொருளாளர் அ.தயானந்தரவி ஆகியோர் நேரடியாக சென்று உதவியினை வழங்கியுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது அண்மையில் வீட்டு வளவினை துப்பரவு செய்து குப்பைகளை எரிக்கும் போது ஓலையினால் வேயப்பட்ட வீடொன்று தீக்கிரையாகியுள்ளது. தீயினை கட்டுப்படுத்த முயற்சிகள் எடுத்த போதும்

யாழில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

Posted by - February 5, 2017

யாழ் கீரிமலை பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை காணாமல் போன 10 வயது சிறுவன் நீர்த்தொட்டியில் வீழ்ந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டில் இருந்து தனது பாட்டியின் வீட்டிற்கு சென்ற கஜேந்திரகுமார் கஜீபன் என்ற சிறுவனே இவ்வாறு பாழடைந்த தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வாகனங்களை சுத்தரிகரிப்பதற்கு அமைக்கப்பட்ட குறித்த நீர் தொட்டியானது, தற்போது பாவனையில் இல்லாத நிலையில் மழைநீர் தேங்கி உள்ளது. மேலும் குறித்த சிறுவன்

கேப்பாப்புலவு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புதுக்குடியிருப்பில் ஆர்ப்பாட்டம்

Posted by - February 5, 2017

கேப்பாப்புலவு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புதுக்குடியிருப்பில் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. புதுக்குடியிருப்பு போராட்டம் நேற்று முன்தினம் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் ஆரம்பிக்கப்பட்டது. இந்தநிலையில், குறித்த இடத்திற்கு இன்று சென்ற வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுடன் கலந்துரையாடியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட 49 பேருக்கு சொந்தமான, 19 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்து இம்மாதம் மூன்றாம் திகதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபடுபட்டு வருகின்றமை

கோப் குழு என்ற பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்-சந்திம வீரக்கொடி

Posted by - February 5, 2017

கோப் குழு என்ற பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். சில விடயங்கள் குறித்து அரசியல் கோணத்தில் பார்க்காமல் செயற்படுவது மிகவும் முக்கியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு வழங்கும் உடன்படிக்கை செல்லுப்படியற்றது என்பதால், அந்த எண்ணெய் குதங்களை கையகப்படுத்துமாறு கோப் குழு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை

விடுதலைப் புலிகளின் சுதந்திரத்திற்காக அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது -பந்துல குணவர்தன

Posted by - February 5, 2017

நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களை தவிர்த்து விட்டு விடுதலைப் புலிகளின் சுதந்திரத்திற்காக அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு கொழும்பு வெலிகடை புதிய மெகசீன் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இலங்கையின் சுதந்திரத்தினை தொடர்ந்தும் நிலைத்திருக்க பாடுபட்டு உழைத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பாதுகாப்பு

உள்ளக பிரச்சினைகள் தொடர்பில் மைத்ரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க முக்கிய கலந்துரையாடல்

Posted by - February 5, 2017

நாட்டில் தற்போது இருக்கும் உள்ளக பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். நல்லாட்சி அரசினால் மேற்கொள்ளவிருக்கும் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் இன்று ஜானாதிபதி செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது. மேலும் குறித்த பேச்சுவார்த்தையில் சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த முக்கிய சில உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த சந்திப்பில் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், எதிர்கால அமைச்சரவை சீர்திருத்தம் தொடர்பாகவும்

ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் சில நிறைவேற்று அதிகாரங்கள் இருக்கவேண்டும் -எஸ் பி திசாநாயக்க

Posted by - February 5, 2017

ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் சில நிறைவேற்று அதிகாரங்கள் இருக்கவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் பொருளாளர் அமைச்சர் எஸ் பி திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். 19ஆவது திருத்த சட்டத்தின்கீழ் சில நிறைவேற்று அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் இருக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் ஒற்றையாட்சியை தக்கவைப்பதற்காக சில நிறைவேற்று அதிகாரங்கள் ஜனாதிபதியின் கைகளில் இருப்பது அவசியமாகும் எனவும் திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரதேவி சிலையை டிரம்ப் வெட்டுவது போன்று கார்ட்டூன்: ஜெர்மனி பத்திரிகை

Posted by - February 5, 2017

டொனால்டு டிரம்பின் நடவடிக்கையை சித்தரிக்கும் வகையில் சுதந்திரதேவி சிலையை டிரம்ப் வெட்டுவது போன்று ஜெர்மனியின் பிரபல வார இதழ் ஒன்று கார்ட்டூனை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.