கவிரதன்

இடைக்கால அறிக்கை மீதான விவாதம் மேலும் நீடிப்பு

Posted by - November 3, 2017
அரசியல் யாப்பு குறித்த வழிநடத்தற்குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த விவாதம் நாடாளுமன்ற அரசியலமைப்பு பேரவையில் நேற்று நான்காவது நாளாகவும் இடம்பெற்றது. இந்த விவாதம் தொடர்ச்சியாக எதிர்வரும் 8ம் திகதியும் நடைபெறும் என்று சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும்

இந்தியாவின் பாதுகாப்பு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்

Posted by - November 3, 2017
இந்தியாவின் மூன்று பாதுகாப்பு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன. இந்தியக் கடற்படைக் கப்பல்களான திர் மற்றும் சுஜாதா என்பனவும், இந்திய கடலோர பாதுகாப்பு கப்பலான சாரதியும் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. நல்லெண்ண மற்றும் பயிற்சிகள் நோக்கில் இந்த கப்பல்கள் அங்கு…
மேலும்

பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

Posted by - November 3, 2017
பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழுவின் தலைவர் ஜேன் லெம்பர்ட் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு அமைய மீண்டும் ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில்…
மேலும்

பிணை முறி விநியோக மோசடி ஆணைக்குழுவில் பிரதமர்

Posted by - November 3, 2017
பிணை முறி விநியோக மோசடிகள் குறித்த விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அடுத்தவாரம் முன்னிலையாவார் என்று தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. அதிகாரக் காலம் நீடிக்கப்பட்ட குறித்த ஆணைக்குழுவின் விசாரணைகள் நேற்று மீள ஆரம்பிக்கப்பட்டன. இந்த…
மேலும்

கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற பதவி முன்னாள் அமைச்சருக்கு

Posted by - November 3, 2017
கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற பதவி, முன்னாள் அமைச்சர் பியசேனவிற்கு வழங்கப்படவுள்ளது. இரட்டைக் குடியுரிமையைக் கொண்டவர் என்ற அடிப்படையில், கீதாகுமாரசிங்கவினால் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர முடியாது என்ற மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை, உயர் நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது. இந்தத் தீர்ப்பு கிடைக்கப்பெற்றதும்,…
மேலும்

சிறிலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானம்மிக்க கூட்டம் இன்று

Posted by - November 3, 2017
எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானம்மிக்க கூட்டம் ஒன்று இன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடலுக்கு மகிந்த அணியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, கட்சியின் பொதுசெயலாளர் துமிந்த…
மேலும்

மாணவரை தாக்கிய அதிபர் கைது

Posted by - November 3, 2017
மாத்தறை – ஊரபொக்க தேசிய பாடசாலையின் அதிபரை காவற்துறையினர் கைது செய்தனர். பாடசாலை மாணவர் ஒருவரை கடுமையாக தாக்கியமைக்காக அவர் தைகானார். இந்த முறை சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர் ஒருவர் மீது அவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த மாணவர்…
மேலும்

741 பொதுமக்களுக்கு மரண தண்டனை

Posted by - November 3, 2017
ஈராக்கின் மோசுல் நகரில் குறைந்தபட்சம் 741 பொதுமக்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் மரண தண்டனைக்கு உள்ளாக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை இதனைத் தெரிவித்துள்ளது. அத்துடன் தீவிரவாதிகள் மிகப்பெரிய அளவிலான மனித கடத்தல்களையும் நடத்தி இருப்பதுடன், பொதுமக்களை மனித கேடயங்களாகவும் பயன்படுத்தி…
மேலும்

ஆண் – பெண் சமநிலை – 100 ஆண்டுகளுக்கு சாத்தியம் இல்லை

Posted by - November 3, 2017
ஆண் – பெண் சமநிலை எதிர்வரும் 100 ஆண்டுகளுக்கு சாத்தியம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதார பேரவையின் ஆய்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 144 நாடுகளில் பெண் மற்றும் ஆண்களுக்கான பொருளாதார வாய்ப்புகள், கல்வி, அரசியல் பங்கேற்பு மற்றும் சுகாதாரம்…
மேலும்

கட்டலோனிய பிராந்திய முன்னாள் அமைச்சர்கள் சிறையில்

Posted by - November 3, 2017
கட்டலோனியா பிராந்தியத்தின் முன்னாள் அமைச்சர்கள் எண்மர் ஸ்பானிய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் இருந்து கட்டலோனியாவைப் பிரித்து தனிநாடாக அறிவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டமைக்காக அவர்கள் கைதாகியுள்ளனர்.   ஸ்பெயினின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட பிராந்தியமாக இருந்த கட்டலோனியாவை, தனிநாடாக மாற்றுவதற்கு மக்கள் கருத்துக்…
மேலும்