அமைச்சுக்கள் தொடர்பில் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்படும் போது, அதனுடன் தொடர்புடைய அமைச்சர்கள் நாடாளுமன்றிற்கு வருகை தராமல் இருக்கின்றமை சிக்கல் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்தில் பயிலும் மாணவர்கள் சிலர் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தித்துள்ளதாக தெரியவருகிறது.
உயிரிழந்தது வணக்கத்துக்குரிய அக்கமஹா பண்டித தவுல்தென ஞானீசர மகாநாயக தேரரா..? அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவா..? என மக்களிடத்தில் சந்தேகம் ஏற்படும் என அமைச்சர் ராஜிதசேனரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஜெனிவா பற்றி அதிகம் பேசி வந்தாலும், அவை ஜெனிவாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட உத்தரவுகள் அல்ல, பரிந்துரைகள் மாத்திரமே என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 592 பேர் பன்றிக்காய்ச்சலுக்கான சிகிச்சையை பெற்றுள்ளனர். எனவே கர்ப்பிணி பெண்களை அவதானமாக இருக்குமாறு சுகாதார துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பனாமா கொடியுடனான கொள்கலன் தாங்கிய கப்பல் ஒன்று கொழும்பு தெற்கு கடற்பரப்பில் நேற்று தீ பற்றிக் கொண்ட நிலையில், தீயை அணைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக, கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.