ஒரு வருடமும் 03 மாதங்களுடைய தனது மகளை அடிக்கடி தாக்கி சித்திரவதை செய்ததாக கூறஙப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வனாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.
மாலபே சயிட்டம் நிறுவனத்தை மக்கள் மயப்படுத்த வேண்டும் என்பது உட்பட 3 கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு இன்று காலை 8 மணிதொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் இடங்களில் பாதுகாப்பு வலையங்கள் அமைக்க ரஷ்யா, துருக்கி, ஈரான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அமெரிக்க பாராளுமன்றத்தில் ஒபாமா கேர் திட்டத்தை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கென நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்டு திரும்பும் போது ரோம் நகரில் போப் பிரான்சிஸ்-ஐ அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திக்க இருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது.
அன்னிய செலாவணி வழக்கின் குற்றச்சாட்டு பதிவை வீடியோ கான்பரன்சிங் மூலம் சசிகலாவிடம் விசாரிக்க எழும்பூர் பொருளாதார கோர்ட்டு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.