கிழக்கு ஆப்ரிக்க நாடான ஜாம்பியாவின் விக்டோரியா நீர்வீழ்ச்சி பகுதியில் மின்சார சாதனத்தை பபூன் குரங்கு சேதப்படுத்தியதால் சுமார் 40 ஆயிரம் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
சவுதி அரேபியாவில் குட்டைப் பாவாடை மற்றும் டீ-சர்ட் அணிந்து வீதியில் வலம்வருவது போன்ற வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்ட பெண்ணை போலிசார் கைது செய்துள்ளனர்.
கொடுங்கையூர் தீ விபத்தில் படுகாயம் அடைந்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் உயிர் இழந்தனர்.
கடந்த சில மாதங்களாவே தமிழகம் உள்பட சில மாநிலங்களில் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கம் குறைக்கப்பட்டுள்ளது. வங்கி மற்றும் ஏ.டி.எம்.களிலும் ரூ.2000 நோட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ராமேசுவரத்தில் உள்ள பேய்க்கரும்பில் கட்டப்பட்டு வரும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் மணிமண்டபத்தை வருகிற 27-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்த விழாவில் 4 மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.