கொழும்பு – காங்கேசன்துறை வரைக்குமான புகையிரத சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

513 0
கொழும்பு – காங்கேசன்துறை வரைக்குமான புகையிரத சேவையானது எதிர்வரும் 23ஆம் திகதியில் இருந்து 27ஆம் திகதி வரை நாவற்குழி புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
நாவற்குழியில் உள்ள புகையிரத பாலத்தில் உள்ள திருத்த வேலை காரணமாக கொழும்பு – காங்கேசன்துறை வரைக்குமான புகையிரத சேவை நாவற்குழிவரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் குறித்த தினங்களில் முற்பதிவு செய்த பயணிகள் விசேட பேரூந்து மூலம் நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத திணைக்கள உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment