டெங்கு நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும்

264 0

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக எதிர்வரும் மாதங்களில் டெங்கு நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட நிபுணத்துவர் ஆனந்த விஜேவிக்ரம இதனை தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக சுற்று சூழலை பாதுகாப்பாக வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை டெங்கு நோய் தொற்று காரணமாக ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 133 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a comment