குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு – தாழ்நிலப்பகுதியில் மக்கள் அவதானம்

412 0

நிலவும் அதிக மழை காரணமாக குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

அதன்படி, புளத்சிங்கள, மதுராவல மற்றும் இங்கிரிய பிரதேசங்களை சேர்ந்த மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்வரும் சில நாட்களுக்கு மழை காலநிலை நீடிக்கும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் 100 மில்லிமீற்றர் வரையில் அடை மழை பெய்யக்கூடும் என்றும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை மழை காலநில காரணமாக இரத்தினபுரி மாவட்டத்துக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a comment