முன்னாள் நீதியரசரின் மனுவுக்கு எதிராக மேலும் 4 மனுக்கள்

243 0

மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டத்துக்கு எதிராக முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வா தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேலும் நான்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரான நாடாளுமுன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், சட்டதரணி ரஜிக கொடித்துவக்கு, புரவெசி பலய அமைப்பின் இணைப்பாளர் காமினி வியாங்கொட உட்பட நான்கு பேர் குறித்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டமானது, சட்டத்திற்கு முரணான வகையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக கூறி முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வாவினால், கடந்த 28ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதேவேளை, மாகாண சபை தேர்தல்களை விரைவு படுத்தும் வகையில் உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் உதயகம்மன்பில உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்துள்ளார்.

Leave a comment