ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டு விழா[படங்கள் இணைப்பு]

316 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான் பிரதேச பண்பாட்டு விழா இன்று 05-10-2017 மாலை மாங்குளம் மகாவித்தியாலய மைதானத்தில் சிறப்புற நடைபெற்றுள்ளது.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ய.அனிருத்தனன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நிகழ்வின் தொடக்கத்தில் மாங்குளம் நகர்பகுதியில் இருந்து மக்களின் பாரம்பரிய கலைபடைப்புக்களை தாங்கிய ஊர்திகள் மற்றும் மாணவர்கள் கலைஞர்களின் கோலாட்டம்,கும்மி,கரகாட்டம்,பறை,காவடியுடன், மாங்குளம் மகாவித்தியாலய மைதானத்தை சென்றடைந்து அங்கு தேசியக்கொடியினை மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்கள் ஏற்றிவைக்க பிரதேச செயலக கொடியினை ஒட்டிசுட்டான் பிரதேச செயலாளர் ஏற்றிவைத்துள்ளார்.

தொடர்ந்து வருகைதந்த பிரதமவிருந்திரனர்,சிறப்பு விருந்தினர்கள்,கௌரவவிருந்தினர்களால் நிகழ்வுச்சுடர் ஏற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து அரங்க நிகழ்வில் முல்லையூர் பார்த்தீபன் எழுதிய பண்பாட்டு பெருவிழா இறுவெட்டினை பிரதேச செயலாளர் வழங்க மாவட்ட அரசாங்க அதிபர் பெற்றுக் கொண்டார்

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் கலைஞர்கள் மற்றும் சமூக சேவையாளர்களுக்கு பண்டாரவன்னியன் நினைவு  விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் பிரதமவிருந்தினராக முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் ரூபவதி கேதீஸ்வரன்,சிறப்பு விருந்தினர்களாக களனிப்பல்கலைக்கழக உளநல ஆலோசகர் பேராசிரியர் எஸ்.ஜே.யோகராசா,யாழ்பால்கலைக்கழக புவியியல் விரிவுரையாளர் செ.ரவீந்திரன், கௌரவவிருந்தினர்களாக, , துணுக்காய் வலயக்கல்விப்பணிப்பாளர் பி.ரவிச்சந்திரன் ,மாந்தைகிழக்கு பிரதேசசெயலாளர்,மற்றும் வெலிஓயா பிரதேச செயலாளர்,ஒட்டுசுட்டான் பொலீஸ்நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.வி.டி.ரத்னாயக்கா,மாங்குளம்பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி வி.பி.ஜே.புஸ்பகுமார ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

அரங்க நிகழ்வாக பிரதேச இளைஞர்களின் கலைநிகழ்வுகள்,கவியரங்கம்,சமூகநாடகம், இசைச்சங்கமம் போன்ற கலை நிகழ்வுகள்என்பன இடம்பெற்றுள்ளது.

நிகழ்வில் சிறப்பு உரையினை மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீவரன் ஆற்றியுள்ளார்.

அவர் தனது உரையில் ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் கலைநிகழ்வுகள் கடந்த ஆண்டினை விட இந்த ஆண்டு வளர்ந்து செல்வதை காணக்கூடியதாக இருப்பதாகவும் இங்கு பெண்களுடன் ஆண்களும் தங்கள் கலையினை வெளிப்படுத்தியுள்ளது இளைஞர்கள் யுவதிகள் மத்தியில் கலையின் வளர்ச்சியினை காணக்கூடியதாக உள்ளது என்று ஒட்டிசுட்டான் பிரதேசத்தை பெருமிதம் கொண்டுள்ளார்.​

Leave a comment