சிறு­மி மீது வல்­லு­றவு வயோதிபருக்கு கடூழியம்

460 0

பதி­னொரு வயது சிறு­மியை மூன்று சந்தர்ப்­பங்­களில் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­திய 50 வயது வயோ­தி­ப­ருக்கு 24 மாத கடூ­ழிய சிறை­த் தண்­டனை விதித்த கண்டி மேல் நீதி­மன்ற நீதிவான் பாதிக்­கப்­பட்ட சிறு­மிக்கு 75000 ரூபா நஷ்ட ஈடாக வழங்க உத்­த­ர­விட்­டுள்ளார்.

கண்டி தென்­னக்­கும்­புர பிர­தே­சத்தை சேர்ந்த 50 வயது நிரம்­பிய வயோ­திபர் ஒரு­வ­ருக்கே நீதிவான் இவ்­வாறு தண்­டனை விதித்­துள்ளார். குறித்த சிறு­மிக்கு தாத்தா உறவு முறை­யான இவ் வயோ­திபர் குறித்த சிறு­மியை மூன்று சந்­தர்ப்­பங்­களில் மிக மோச­மான வகையில் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­யுள்ளார்.

இச்­சம்­பவம் சிறு­மியின் பெற்­றோ­ருக்கு தெரி­ய­வ­ரவே உட­ன­டி­யாக கண்டி பொலிஸ் நிலை­யத்தில் பெண்கள் மற்றும் சிறுவர் பாது­காப்பு பொலி­சா­ருக்கு முறை­பாடு செய்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்தே  பொலி­சாரால் குறித்த நபர் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு கண்டி மேல் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்டு வழக்கு விசா­ர­ணையின் பின்னர் நீதிவான்  24 மாத கடூழிய சிறையும் சிறுமிக்கு 75000 ரூபா நஷ்ட ஈடாகவும் வழங்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment