தமிழ் மக்கள் ஆயுதங்களை கைவிட்டாலும் அஹிம்சையை கைவிடவில்லை – யோகேஸ்வரன்

429 0

காணாமல் போனோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களுக்கு மதிப்பளித்து அஹிம்சை வழியில் தீர்வினை பெற்று கொடுக்க இலங்கை அரசாங்கம் முன்வர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு – காந்தி பூங்காவில் நடைப்பெற்ற காந்தி ஜெயந்தி தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

அஹிம்சை வழியில் போராடிய காந்தி இந்தியாவிற்கு சுதந்திரத்தை பெற்று கொடுத்தார்.

அதனை போன்றே காணாமல் போனோரின் உறவினர்களால் முன்னேடுக்கப்படும் போராட்டங்களுக்கு மதிப்பளித்து தீர்வினை பெற்று கொடுக்க வேண்டும்.

தமிழ் மக்கள் ஆயுதங்களை கைவிட்டாலும் அஹிம்சையை கைவிடவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என சி.யோகேஸ்ரவன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment