வடமராட்சியில் போராட்டம்

267 0

வடமராட்சி கிழக்குப் பகுதிகளில் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் தொழில் புரியும் இடங்களை உள்ளடக்கி வனஜீவராசிகள் தேசிய பூங்காவாக உருவாக்கியதைக் கண்டித்து மக்கள் கவயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

குறித்த வனஜீவராசிகள் தேசிய பூங்காவுக்காக கட்டைக்காடு தொடக்கம் சுண்டிக்குளம் வரையான பகுதிகளில் மக்களின் வாழ்விடங்களையும் தொழில் புரியும் பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது.

இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகள் தமது பூர்வீக நிலங்கள் எனறும் அதற்கான காணி உறுதிப் பத்திரம் தம்மிடம் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே தமது பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்க இடமளிக்கப் போவதில்லை.

தமது நிலையினை கவனத்திற்க் கொண்டு நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கும் இவர்கள் தமது கோரிக்கை நிறைவேறும் வரை தமது கவனயீர்ப்பு போராட்டம் தொடரும் என தெரிவித்து,கவயீர்ப்பு போராட்டத்தினை வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தின் முன்பாக ஈடுபட்டுள்ளனர்.

எமது ஜீவனோபாயத்தினை அழிக்காதே, வன ஜீவராசிகளுக்கு கொடுக்கும் முக்கியம் எமக்கு இல்லையா?

மக்களின் அன்ராட செயற்பாட்டினை குலைக்காதே!, அரசே சுண்டிக்குளம் மக்களை மீள் குடியேற்றம் செய். போன்ற பதாகைகளை போராட்டக்காரர்கள் தாங்கி நின்றனர்.

Leave a comment