ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலர் தேர்தல்கள் ஆணையாளருடன் சந்திப்பு

815 0
ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலர் நேற்று மாலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவை சந்தித்துள்ளனர்.
20வது அரசியல் அமைப்பு சீர்திருத்த சட்ட மூலம் தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெறும ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
20வது அரசியல் அமைப்பு சட்ட மூலம் அரசியல் அமைப்புக்கு முரணானது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் அதனை புறந்தள்ளி, தேர்தலை பிற்போட அரசாங்கம் முனைகின்றது.

Leave a comment