வேலை­யில்­லாப்­பட்­ட­தா­ரி­க­ளுக்கு முதலாம் திகதி பரீட்சை

272 0

கிழக்கு மாகாண வேலை­யில்லாப் பட்­ட­தா­ரி­களை ஆசி­ரியர் சேவைக்குள் உள்­ளீர்ப்­ப­தற்­கான போட்­டிப்­ப­ரீட்சை எதிர்­வரும்  ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி மாவட்­ட­ரீ­தியில் நடை­பெ­ற­வுள்­ளது.

இதற்­கான அனு­மதி அட்­டைகள் பரீட்­சார்த்­தி­க­ளுக்கு மாகாண பொதுச்­சேவை ஆணைக்­கு­ழு­வினால் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளன.

எனினும் இவ் அ­னு­மதி அட்­டைகள் உயர்­தே­சிய கணக்­கியல் டிப்­ளோமா பெற்ற வர்த்­த­கப்­பட்­ட­தா­ரி­க­ளுக்கு அனுப்­பி­வைக்­கப்­ப­ட­வில்லை. இவர்கள் கடந்­த­கால போராட்­டத்தில் பூர­ண­மாக ஈடு­பட்­ட­வர்கள். சுமார் 500பேர் கிழக்கில் உள்­ளனர்.

தமக்கு ஆசி­ரியர் நிய­மனம் நிச்­சயம் கிடைக்கும் என எதிர்­பார்த்­தி­ருந்­த­வர்­க­ளுக்கு ஏமாற்­றமே கிடைத்­துள்­ளது.

இதனை கிழக்கு மாகாண முத­ல­மைச்­சரும் ஏனை­யோரும் கருத்­திற்­கொள்­ள­வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

இது தொடர்பில் பாதிக்­கப்­பட்ட கல்­மு­னை­யைச்­சேர்ந்த  வர்த்­த­கப்­பட்­ட­தாரி தமிழ்ச்­செல்வி கருத்­து­ரைக்­கையில்:

தங்­க­ளுக்கு ஏன் அனு­மதி அட்­டைகள் அனுப்­பப்­ப­ட­வில்­லை­யென சம்­பந்­தப்­பட்ட பரீட்­சைப்­ப­கு­தி­யி­ன­ரிடம் கேட்­ட­போது 1990.44 சுற்­று­நி­ரு­பத்தின் பிர­காரம் இத்­த­கைய பட்­ட­தா­ரி­க­ளுக்கு நிய­மனம் வழங்­க­மு­டி­யாது என வேண்­டா­வெ­றுப்­பாக சுருக்­க­மா­கப்­ ப­தி­ல­ளித்­து­விட்டு தொலைபேசியை வைக்­கின்­றார்கள்.

ஆனால் எமக்கு முன்னர் எம்­போன்ற பட்­ட­தா­ரிகள் கிழக்கில் ஆசி­ரி­ய­ர்களா­கவும் அதி­ப­ர்களா­கவும் சேவை­யாற்­றி­வ­ரு­கின்­றனர். அது­மட்­டு­மல்ல. தென் மாகாணம் மற்றும் வட­மத்­திய மாகா­ணங்­களில் எம்­போன்­ற­வர்கள் அரச தொழி­லுக்கு இம்­முறை கூட தெரி­வாகி சேவை­யி­லுள்­ளனர்.

எம்­மிடம் பல்­க­லைக்­க­ழ­கங்கள் மானிய ஆணைக்­குழு வழங்­கிய பட்­ட­தாரி சான்­றி­தழும் இருக்­கின்­றது.இந்­நி­லையில் எமக்கு மட்டும் ஏனிந்த புறக்­க­ணிப்பை கிழக்கு மாகா­ண­சபை

முன்­வைத்­துள்­ளது? நாம் அனைவரும் ஓரிரு நாட்­களில் ஒன்றுசேர்ந்து மீண்டும் போராட்டம் நடத்த ஆலோசித் துவருகின் றோம் என்றார்.

Leave a comment