ரயில் பாதையில் இரண்டு துண்டுகளாக இளம் பெண்ணின் சடலம்

226 0

இளம் பெண்ணொருவர் ரயில் முன் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஹிக்கடுவையில் இடம்பெற்றுள்ளது.

ஹிக்கடுவையில், இன்று முற்பகல் பதினொன்றரை மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாகரீக உடையணிந்த அந்தப் பெண்ணின் உடல், புகையிரதம் ஏறியதில் தண்டவாளத்திலேயே இரு துண்டுகளாகச் சிதைந்திருந்ததாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்ணின் சடலம் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை அவர் குறித்த விபரங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment