அர்ஜுன் மகேந்திரனிடம் இன்று சாட்சியம்

191 0

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் இன்று பிணை முறி விநியோக மோசடி குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக உள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்படவுள்ள சாட்சி விசாரணைக்காகவே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவினால் அர்ஜுன் மகேந்திரனை அழைக்க தீர்மானிக்கப்பட்டது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் சாட்சி அத்தியாவசியமானது என கருதப்படும் நிலையில் அவர் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment