7 வயது சிறுமி மீது சூடு – தாய் கைது

310 0

7 வயது சிறுமி மீது சூடு வைத்த தாய் ஒருவர் ஏறாவூரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஏறாவூர் பள்ளியடி பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி தங்க மோதிரம் ஒன்றை தொலைத்ததினாலேயே தாய் சிறுமியின் உடலில் தீச்சூட்டு காயங்களை ஏற்படுத்தியுள்ளார்.

சிறுமியின் கைகள், கால்பாதம் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் தீச்சூட்டு காயங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் அயலவர்கள் வழங்கிய தொலைபேசி மூலமான தகவல் ஒன்றின் படி குறித்த தாய் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த சிறுமி ஏறாவூர் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதின் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Leave a comment