20ஆம் திகதி முதல் சேவை புறக்கணிப்பு – தொடரூந்து திட்டமிடல் மேற்பார்வை அதிகாரிகள்

540 0

எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் சேவை புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தொடரூந்து திட்டமிடல் மேற்பார்வை அதிகாரிகள் தொழிற்சங்க சம்மேளனம் எச்சரித்துள்ளது.

வேதன முரண்பாடு உள்ளிட்ட தமது சில பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த நிலையிலேயே எதிர்வரும் 20 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிமுதல் 48 மணிநேர சேவை புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக தொடரூந்து திட்டமிடல் மேற்பார்வை அதிகாரிகள் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Leave a comment