மருந்தை மாற்றி கொடுத்தமையினால் சிறுமி மரணம்

252 0

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட கட்டைப்பரிச்சான் பகுதியில் தாய் தவறுதலாக மருந்தை தனது 04வயது குழந்தைக்கு மாற்றி கொடுத்தமையினால் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டும் இன்று (15) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

இவ்வாறு உயிரிழந்த சிறுமி அதே இடத்தைச்சேர்ந்த சிவகாந்தன் பிறெஸ்மி  (04வயது) எனவும் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது நேற்றிரவு 8.30மணியளவில் மகளுக்கு  தடிமல்  இருந்தமையினால் பிறிடன் மருந்தை கொடுத்ததாகவும் அதனையடுத்து சிறுமி வயிற்றுக்குள் எரிவு  என கூறியதாகவும் தாயாரான கிருஷ்ண வேணி தெரிவித்தார்.

இதேவேளை தாய் வழங்கிய மருந்தை

தந்தை குடித்து பார்த்த போது மருந்து தவறுதலாக மாறி கொடுத்திருப்பது தெரியவந்தது.

அதே நேரம் மின்சாரத்தடை ஏற்பட்டிருந்த போது பிறிடன் மருந்துக்கு பதிலாக வயது வந்தவர்கள் நோவுக்காக பயன்படுத்தும் மீதைல் சலிசிலேட் ஒரே நிறத்திலான போத்தலில் வைக்கப்பட்டிருந்தமையினால் தவறுதலாக கொடுக்கப்பட்டமையினாலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

சிறுமிக்கு வழங்கிய மருந்தை குடித்து பார்த்த தந்தையும் மயக்க நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகின்றது.

சிறுமியின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a comment