20வது திருத்த சட்டம் – சப்ரகமுவில் நிறைவேற்றம்

591 0
மாகாண சபைகளின் தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவது தொடர்பான ஒதுக்கீடுகள் அடங்கிய 20ஆம் திருத்தச்சட்ட மூலம் திருத்தங்களுடன் சப்ரகமுவ மாகாண சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
யோசனைக்கு ஆதரவாக 29 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
குறித்த சட்ட மூலம் மேல், கிழக்கு மற்றும் வடமத்திய மாகாண சபைகளில்; ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, தெற்கு மற்றும் ஊவா மாகாண சபைகளில் இந்த சட்ட மூலம் தோல்வியடைந்துள்ளது.

Leave a comment