மகாகவி பாரதியின் 96 ஆவது ஆண்டின் மறைவின் நினைவேந்தல்

278 0

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 96 ஆவது ஆண்டின் மறைவின் நினைவேந்தல்கள் இன்றைய தினம் யாழ்ப்பாண அரசடியில் அமைந்துள்ள அன்னாரின் தூவியில் முன்பாக நடைபெற்றது.

யாழ்ப்பாண இந்திய உதவித் தூதுதரகத்தின் ஏற்பாட்டில் இந்த தினம் கொண்டப்பட்டது.

குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ் இந்திய உதவித்தூதுவர் அ.நடராஐன் கலந்து கொண்டு மகாகவி சுப்பிரமணிய பாரதியாருக்கு மலர் மாலை அணிவித்து கௌரவித்தார்.

இதில் நல்லை ஆதின குரு முதல்வர்கள், சமயத் தலைவர்கள், போராசிரியர்கள், அறிஞர்கள், மாணவர்கள், ஊடகவியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறைவு நாளினை முன்னிட்டு மரக்கன்றுகளை யாழ் இந்திய உதவித்தூதுவர் அ.நடராஐன் வழங்கிவைத்தார். பின்னர் மகாகவியாரின் பாடல்களும் அங்கு இசைக்கப்பட்டன.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் 1921 ஆண்டு 09 மாதம் 11 ஆம் திகதி மறைந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Leave a comment