புலமை செயற்றிட்டங்களும் ஊடகங்களின் பங்கும்

14485 0

சுதந்திர ஊடக சங்கத்தின் ஏற்பாட்டில் புலமை செயற்றிட்டங்களும் ஊடகங்களின் பங்கும் என்னும் கருப்பொருளிலான ஊடக செயலமர்வு ஒன்று நேற்று யாழ்ப்பாணத்தில் சுதந்திர ஊடக சங்கத்தின் தலைவர் ஹோமல் கொடாரவர்த்தன தலைமையில் நடைபெற்றது. 

குறித்த செயலமர்வானது இலங்கையின் ஊடகத் துறையினை மறு மலர்ச்சியின் பின்னர் ஊழல், இலஞ்சம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், தற்போதைய காலத்தில் ஊடகத் துறையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஊடகவியாளர்களின் பங்குகள் போன்ற விடையங்களை பற்றி கருத்தரங்குகள் சிரேஸ்ட ஊடகவியாளர்கள் ஆற்றினர்.

இங்கு கருத்து தெரிவித்த சுதந்திர ஊடக சங்கத்தின் தலைவர் ஹோமல் கொடாரவர்த்தன, இலங்கை இலஞ்ச, ஊழல் தொடர்பில் 38 வது இடத்தில் உள்ளது.

இருந்தபோதில் அது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகவியாளர்கள் எழுத முன்வரவேண்டும்.

எமது நாட்டில் இவ்வாறான தன்மையினை அதிகரிக்க செல்லுமானால் அவற்றினை மறைக்காது எழுத முன்வரவேண்டும்..என்று தெரிவித்தார்

நாட்டின் அபிவிருத்தியினை கட்டியேழுப்ப ஊழல்,இலஞ்ச தொடர்புக்கு முற்றுப்புள்ளியினை வைக்க ஊடகவியாளர்கள் மற்றும் கல்வி சமூகத்தினர், பொதுமக்களும் முன்வரவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a comment