கனடாவில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்!

358 0

கனடாவில் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக 18 வயது இளைஞர் மீது பொலிசார் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் Eglinton அவென்யூ பகுதியில் கத்தியால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிருக்குப் போராடி வருவதாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்த நபரை பொலிசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.

இதேவேளை குறித்த நபரை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கத்தியால் தாக்கப்பட்டுள்ளதை மருத்துவர்கள் உறுதி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குகப்பிரியன் மகேந்திர ராஜா (33) கடந்த புதன்கிழமை உயிரிழந்துள்ளதாக நேற்று (08) பொலிசார் அறிவித்துள்ளனர்.

Leave a comment