கல்வி அமைச்சர் அதிரடி அறிவித்தல்

249 0

தரம் ஆறுக்கு மேல் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் மடிக் கணினிகளை பெற்றுக்கொடுக்க உள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாடசாலை செல்லும் 5 முதல் 19 வயதுடைய மாணவர்களுக்கு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து காப்புறுதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a comment