மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் முல்லைத்தீவிற்கு விஜயம்!

310 0
முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் கொக்­கி­ளாய் பிர­தே­சத்­தில் மீள் குடி­ய­மர்ந்த 164 குடும்பங்களின்  614 ஏக்­கர் மானா­வாரி வயல் காணி­ மற்றும் 800 ஏக்கர் வயல்நிலங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் 12ம் திகதி முல்லைத்தீவிற்கு பயணம் செய்யவுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டம் கொக்­கி­ளாய் பிர­தே­சத்­தில் மீள் குடி­ய­மர்ந்த 164 குடும்பங்களின்  614 ஏக்­கர் மானா­வாரி வயல் காணிப் பிணக்­கு­கள் தீர்க்­கப்­பட வேண்­டும். பெரும்­பான்மை மக்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளின் காணி­கள் மீண்­டும் அவர்­க­ளுக்குப் பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட வேண்­டும்  என நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கோரிக்கை விடுத்திருந்தார்.
 குறித்த கோரிக்கைக்கே மகாவலி இராஜாங்க அமைச்சர்  முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் 614 ஏக்கருக் கும் தீர்வாக அனுமதிப் பத்மிரம் வழங்க சம்மதம்  வழங்கியதோடு 835 ஏக்கர் தொடர்பில் உரையாடி இறுதித் தீர்வையெட்டும் வகையில் இன்றைய தினம்  பாதிக்கப்பட்ட மக்கள் பிரதேச செயலாளர் உள்ளிட்ட சகலதரப்பும் அமைச்சர் தலமையில்  கலந்துரையாடலுற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிந்த்து.்இருப்பினும் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் பணி நிமித்தம் வெளிநாடு சென்றுள ளதால் மேற்படி கூட்டம் பிற்படப்பட்டுள்ளது.
அதாவது  கொக்­கி­ளாய் கிழக்கு, கொக்­கி­ளாய் மேற்கு, கரு­நாட்­டுக்­கேணி, கொக்­குத்­தொ­டு­வாய் தெற்கு மற்­றும் கொக்­குத்­தொ­டு­வாய் மத்தி ஆகிய கிராம அலு­வ­லர் பிரி­வி­லுள்ள மக்­க­ளுக்குச் சொந்­த­மாக எரிஞ்­ச­காடு, குஞ்­சுக்­கால் வெளி, வெள்­ளைக் கல்­லடி போன்ற மானா­வரி வயல்­வெ­ளி­க­ளும், அடை­ய­க­றுத்­தான், தொண்­ட­கண்­ட­கு­ளம், பூம­டு­கண்­டல், உந்­த­ரா­யன்­கு­ளம், ஆமை­யான்­கு­ளம், கூமா­வ­டி­கண்­டல் வெளி போன்ற நீர்ப்­பா­சன வயல் வெளி­க­ளும் 1952 மற்­றும் 1980ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­யில் முல்­லைத்­தீவு மாவட்­டச் செய­ல­கத்தால் குறித்த மக்­க­ளுக்கு அனு­ம­திப்­பத்­தி­ரம் வழங்­கப்­பட்ட வயல் காணி­க­ளா­கும்.
அதன்­பின்பு 1984ஆம் ஆண்டு ஏற்­பட்ட அசா­தா­ரண சூழ்­நி­லை­யால் அனைத்து மக்­க­ளும் இடம்­பெ­யர்ந்­த­னர்.
இந்­த­வே­ளை­யில் 1988.04.15 மற்­றும் 2007. 03.09 ஆம் திக­திய வர்த்­த­மா­னிப் பிர­சு­ரத்­தில் குறித்த பிர­தே­சம் ‘மகா­வலி ‘‘ஸி’’ வல­யம் என பிர­சு­ரிக்­கப்­பட்­டுள்­ளது குறிப்­பி­ டத்­தக்­கது. இடப்­பெ­யர்­வின் பின் மீண்­டும் 2011ஆம் ஆண்டு தமது  பிர­தே­சங்­க­ளில் மக்­கள் மீள் குடி­ய­மர்ந் துள்­ள­னர்.
எனி­னும் இவ்­வா­றான தொடர்ச்­சி­யான இடப்­பெ­யர்­வின் கார­ண­மாக குறித்த மக்­க­ளி­டம் இருந்த அனைத்து ஆவ­ணங்­க­ளும் தொலைக்­கப்­பட்­டுள்­ளன.
ஆனால் தற்­பொ­ழுது 614 ஏக்­கர் மானா­வாரி வயல் காணி­க­ளுக்­கச் சொந்­த­மான 164 குடும்­பங்­க­ளுக்கு 2013/01 சுற்று நிரு­பத்­துக்­க­மைய தொலைந்த உத்­த­ர­வுப்­பத்­தி­ரங்­க­ளுக்­குப் பதி­லாக புதிய உத்­த­ர­வுப்­பத்­தி­ரங்­கள் வழங்­கப்­ப­டா­துள்­ளன.
  ஆயன்­கு­ளம், முந்­தி­ரி­கைக்­கு­ளம், மறிச்­சுக்­கட்­டுக்­கு­ளம்  போன்ற  குளங்­க­ளின் கீழுள்ள 225 தமிழ் மக்­க­ளுக்­குச் சொந்­த­மான 835 ஏக்­கர் நீர்ப்­பா­சன வயல்­கா­ணி­கள் இந்­தப்­பி­ர­தே­சங்­க­ளில் குடி­ய­மர்த்­தப்­பட்ட சிங்­கள மக்­க­ளுக்­குப் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ளது. முன்­னர் வழங்­கப்­பட்ட இந்­தக் காணி­க­ளுக்­குச் சொந்­த­மான தமிழ்­மக்­கள் தமது வாழ்­வா­தா­ரத்­துக்­கான காணி­களை இழந்த நிலை­யில் மிக­வும் வறு­மைக்­கோட்­டின் கீழ் வாழ்­கின்­றார்­கள்.
எனவே 2013/01 சுற்­று­நி­ரு­பத்­துக்­க­மை­ வாக உத்­த­ர­வுப்­பத்­தி­ரங்­கள் வழங்­கப்­ப­டாத 164 குடும்­பங்­க­ளின் 614 ஏக்­கர் மானா­வாரி வயல்­கா­ணி­க­ளுக்­கான உத்­த­ர­வுப்­பத்­தி­ரங்­கள் வழங்­கப்­ப­ட­வேண்­டும்.
 தற்­போது சிங்­கள மக்­க­ளுக்குப் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்ள 225 குடும்­பங்­க ­ளின் 835 ஏக்­கர் நீர்ப்­பா­சன வயல்­கா­ணி­கள் மீள­வும் முன்­னர் வழங்­கப்­பட்ட   தமிழ் மக்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­வ­தற்­கும் நட­வ­டிக்கை எடுக்க ஆவன செய்­ய­வேண்­டும் போன்ற கோரிக்கைகளை நாடாளுமன்றம் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கமைய சகல தரப்பின் கூட்டம் இடம்பெறுவதற்கு முன்னர் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் படிப்பாளர் நாயகம் எதிர் வரும் 12ம் திகதி மேற்படி 835 ஏக்கர் நிலப் பரப்பினையும் பார்வையிடுகின்றார்.
அவ்வாறு பார்வையிட்டதன் பின்னர் மாவட்ட அரச அதிபர் நாடு திரும்பியதும் கலந்துரையாடலிற்கான திகதி நிர்ணயிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த கலந்துரையாடல் எதிர் வரும் 21ம் திகதி இடம்பெற எதிர் பார்க்கப்படுகின்றது.

Leave a comment