கௌரி லங்கேஸ் படுகொலை – பாதுகாப்பு கமராக்களில் பதிவு 

3835 0

இந்தியாவின் முக்கிய ஊடகவியலாளரான கௌரி லங்கேஸ் படுகொலை செய்யப்பட்டமை அவரது இல்லத்தில் பொருத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது.

55 வயதான கௌரி லங்கேஷ் நேற்று முன்தினம் மாலை அவரது இல்லத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாதுகாப்பு கமரால் பதிவாகியுள்ள காட்சிகளில், துப்பாக்கித் தாக்குதல் நடத்தியவரின் உருவமும் தெரிவதாகவும், அவர் மேலும் இரண்டு பேருடன் இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கர்நாடாக அரசாங்கம் இந்த தாக்குதல் தொடர்பில் துரிதமான விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ளது.

எனினும் இந்த படுகொலைக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

Leave a comment