மாணவி அனிதா தற்கொலை: எந்த தேர்வையும் சந்திக்க மாணவர்களை தயார்படுத்துவோம் – செங்கோட்டையன்

468 0

மாணவி அணிதாவின் தற்கொலை பெரும் வேதனை அளிக்கிறது எனவும் எதிர்காலத்தில் எந்த தேர்வு வந்தாலும் அதை சந்திப்பதற்கு மாணவர்களை தயார்படுத்துவோம் எனவும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

டெல்லியில், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம், மாணவி அனிதா தற்கொலை பற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு செங்கோட்டையன் கூறியதாவது:-

மாணவியின் தற்கொலை பெரும் வேதனை தரும் ஒன்றாக இருக்கிறது. எங்களைப் போன்றவர்கள் எண்ணிப்பார்க்க முடியாத நிகழ்வு அது. அவரது குடும்பத்துக்கு எங்கள் துறை சார்பாக ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்காலத்தில் இதுபோன்று இடர்பாடுகள் வந்து விடக்கூடாது என்ற எண்ணத்திலும், மாணவர்களின் மனதில் அச்சம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் விரைந்து பணியாற்றி வருகிறோம்.

எதிர்காலத்தில் எந்த தேர்வு வந்தாலும் அதை சந்திப்பதற்கு மாணவர்களை தயார்படுத்த இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு வருகிறது. ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் தந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment