110 கலைஞர்களின் உழைப்பில் முதலாவது இருமொழிப் பாடல் கிளிநொச்சியில் வெளியீடு!

464 0

கலைஞனும்  கிராம சேவையாளருமான தனேஷ்  அவர்களின் வரியிலும் குரலிலும்  உருவான தமிழ் சிங்கள இருமொழி  வீடியோ பாடல் இன்று மாலை கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி  பிரதேசசபை மாநாட்டு மண்டபத்தில் வெளியிடப்பட்டுள்ளது

கடந்த  எட்டு மாதகாலமாக பல கலைஞர்களின்  உழைப்பில் உருவான இவ் என்வாழ்க்கையில்  தமிழ் சிங்கள  இருமொழிப் பாடலை பிரதம விருந்தினராக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் ஜெராணி  அவர்களும் சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஸ் வெளிகன்ன அவர்களும் கலந்து கொண்டு வெளியிட்டு வைத்தனர்.
இன் நிகழ்வில் படைப்பாளிகள்  கலைஞர்கள் நலன்விரும்பிகள்  மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a comment