வெளிநாட்டு முதலீடுகள் 300 வீதத்தால் அதிகரிப்பு – ரணில் 

7088 0

இந்த வருடத்தில் இலங்கைக்கு கிடைத்துள்ள வெளிநாட்டு முதலீடுகள் 300 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கையின் வருவாயை மூன்று மடங்காக அதிகரிக்க எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதற்கு இலங்கையில் உள்ள வளங்களை உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.

எப்போதும் இலங்கைக்கு நட்டம் ஏற்படாத வண்ணம் வருவாய் அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.

இலங்கையின் மாணிக்க கற்களுக்கு அதிகமாக கேள்வி உள்ளது.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஆபரணங்களுக்கும் அத்தகைய வரவேற்பை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டார்.

இதேவேளை இன்னும் பல்வேறு துறைகளில் இலங்கையின் வருவாயை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக தெரிவித்துள்ள பிரதமர், ஜனாதிபதி தலைமையில் அதற்கான வாய்ப்பும் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment