இலங்கைக்கு கடன் வழங்க தயார் – ஆசிய அபிவிருத்தி வங்கி

215 0

இலங்கைக்கு 5 பில்லியன் டொலர்களை கடனாக வழங்குவதற்கான தயார் நிலையை ஆசிய அபிவிருத்தி வங்கி வெளிப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018-2022 ஆண்டுக் காலப்பகுதிக்கான ஒத்துழைப்பு மூலாபாய வேலைத்திட்டங்களின் கீழ் இந்த கடன் வழங்கப்படவுள்ளது.

வருடாந்தம் ஒரு பில்லியன் டொலர் வீதமும், 800 மில்லியன் டொலர் பெறுமதியான தொழில்நுட்பம் சார்ந்த உதவிகளையும் வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனியார் துறையின் நிதிசாரா வேலைத்திட்டங்களுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி உதவிகளை வழங்கவிருப்பதாக கூறப்படுகிறது.

Leave a comment