“தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரச்சினைகளை தீர்க்கமுடியாமல் இருப்பது கவலைக்குரியது”-சுனில் ஹெந்துநெத்தி

21472 0

ஜே.வி.பி.யில் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்து பல விடயங்களை செய்யும் போது 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு சில பிரச்சினைகளை தீர்க்கமுடியாமல் இருப்பது கவலைக்குரியது என ஜே.வி.பியின் பொதுச்செயலாளரும் கோப்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹெந்துநெத்தி தெரிவித்தார்.

ஊழல் அற்ற மோசடிகள் அற்ற நாடு ஒன்றை கட்டியெழுப்ப அனைவரும் தங்களது ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்தார்.

நேற்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்த அவர், நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தினையும் சந்தித்தார்.

Leave a comment