‘ஆவா’ குழுவுக்கு சொந்தமான உந்துருளியொன்று கண்டுபிடிப்பு

254 0

யாழ்ப்பாணம் பிரதேசத்தில் இடம்பெறும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களாக கருதப்படும் ‘ஆவா’ குழுவினர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் உந்துருளியொன்று கொக்காவில் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரதேசத்தின் பாழடைந்த பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், யாழ்ப்பாணம் சிறப்பு படையணி அதிகாரிகளால் இந்த உந்துருளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உரிமையாளர் இன்றி சந்தேகிக்கும் படியாக உந்துருளியொன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் குற்றச்செயல் ஒன்றிற்காக இந்த உந்துருளியை பயன்படுத்தி விட்டு பின்னர் மறைத்து வைத்திருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

Leave a comment