பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியாக கடற்படைத் தளபதி!

5621 0

பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் கிர்ஷாந்த சில்வாவிடமிருந்து வெற்றிடமாகும் பதவிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நியமிக்கப்படவுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சின் பிரதானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜெனரல் கிர்ஷாந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டிருந்த காலம் எதிர்வரும் 21ம் திகதி நிறைவடைவதை தொடர்ந்து அவர் ஓய்வு பெற்று தூதுவர் பதவிக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தனது சேவைக்காலத்திலிருந்து ஏதிர்வரும் 22ம் திகதி கடற்படை தளபதி ஓய்வு பெறவுள்ள நிலையில் தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் அவர் பாதுகாப்பு தலைமை அதிகாரியாக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, அடுத்த கடற்படை தளபதியாக கடற்படை கட்டளை தளபதி ரியல் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அல்லது கிழக்கு கடற்படை கட்டளை அதிகாரி ரியல் அட்மிரல் ட்ரவீஸ் சின்னையா நியமிக்கப் படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment